Villupuram

News January 15, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (15.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News January 15, 2025

விழுப்புரத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

image

விழுப்புரத்தில் சாலையோரம் வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோரிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் தனியாக இருந்த வயதான பெண்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த காதணிகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது, அவரிடமிருந்து 36.5 கிராம் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News January 15, 2025

டோல்கேட் வழியாக 58 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன

image

விக்கிரவாண்டி டோல் கேட் பிளாசாவை நேற்று முன்தினம் 52 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. 2ஆவது நாளாக இன்று காலை 7 மணி வரை 58 ஆயிரம் வாகனங்கள் கூடுதலாக சென்றன. இன்றும் வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடும் என விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார், டோல் பிளாசா ஊழியர்கள் வாகனங்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 15, 2025

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

image

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.15) விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு  தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து திருவள்ளுவர் புகழ் பாடி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கு திருவள்ளுவர் புத்தகத்தை வழங்கினார். இந்த நிகழ்வின் போது திமுக மாவட்ட செயலாளர் பொன்கௌதம சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News January 15, 2025

விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்

image

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக ஜனவரி 19ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 4:25க்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

விழுப்புரத்தில் இறைச்சி கடைகள் மூடல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான இன்று (ஜன.15) அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது, கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

4ம் நாளாக தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்கள்

image

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி, 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர். இதனால் விக்கிரவாண்டி டோல்பிளாசவை கார், பஸ் என வாகனங்கள் தொடர்ந்து அணி வகுத்து சென்றன. அதன்படி நேற்று 4வது நாளாக தென்மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை மொத்தம் 32 ஆயிரம் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

News January 15, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 14, 2025

கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா

image

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.கௌதம சிகாமணி ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News January 14, 2025

18,166 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி சிறப்பு ஊக்கத்தொகை

image

கடந்த 2023-24-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு பதிவு செய்து விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள 6 சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு உற்பத்தி செய்து வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.215 வீதம் சம்பந்தப்பட்ட 18,166 விவசாயிகளுக்கு ரூ.29 கோடியே 21 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!