Villupuram

News January 6, 2025

கழிவுநீர் தொட்டியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு; பள்ளிக்கு  விடுமுறை 

image

விக்கிரவாண்டி தனியார் பள்ளிக்கு இன்று (ஜன.6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி பள்ளி மாணவி செப்டிக் டேங்கில் உயிரிழந்த காரணத்தினால், பள்ளி நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. நாளை பள்ளி திறக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

News January 6, 2025

செஞ்சி அருகே கார் விபத்தில் 5 பேர் படுகாயம்

image

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி இஷா யாதவ் என்பவர் (ஜன.4) அன்று தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியில் செஞ்சி கடலாடிகுளம் கூட்டுப்பாதையில் செஞ்சியில் இருந்து வந்த கார், இஷா யாதவ் கார் மீது மோதியது. இந்த விபத்தில் 2 கார்களிலும் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2025

வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே மக்கள் அனைவரும் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்று சோதனை செய்ய வேண்டும். பட்டியலில் பெயர் இல்லை என்றால் உடனடியாக பெயர் சேர்க்க அனைவரும் விழுப்புரம் தாலுகாவில் உள்ள தேர்தல் மையத்திற்கு சென்று பெயரை சேர்த்துக் கொள்ளுமாறு விழுப்புரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

News January 5, 2025

தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவிப்பு

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு விழுப்புரத்தில் இன்று  நடைபெற்றது. சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் இன்று மாலை தேர்வு செய்யப்பட்டார். பொதுவுடமை பாதையில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு போராட்டங்களுக்காக முன்னெடுத்த போற்றலுக்கும் உரிய பெ.சண்முகம் அவர் பணி வரும் காலங்களில் சமரசம் இன்றி தொடரட்டும் என்று தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News January 5, 2025

நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாக அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனி அவர்கள் ஜனவரி 6-ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

எம்பியின் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர்

image

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை அமைச்சர்கள் கணேசன் மற்றும் பொன்முடி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது தொலைபேசி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமிழக முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

News January 5, 2025

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் மதுரை எம்.பி அனுமதி

image

விழுப்புரத்தில் இன்று (ஜன.5) நடைபெறும் கம்யூனிஸ்ட் 24-வது மாநில மாநாட்டிற்கு வருகை புரிந்த மதுரை எம்.பி வெங்கடேஷ் அவர்களுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் வெங்கடேசன்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 5, 2025

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் கலெக்டர் 

image

விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு மராத்தன் தடகள சங்கம் இணைந்து, மாநில அளவிலான மராத்தான் போட்டி இன்று நடத்தின. இந்தப் போட்டியானது, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது. கலெக்டர் பழனி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் கூடுதல் கலெக்டர் பங்கேற்றார். மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

News January 5, 2025

ஸ்க்ரப் டைபஸ் நோயை எப்படி தடுக்கலாம்

image

▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 5, 2025

ஸ்க்ரப் டைபஸ் நோய் வந்தால் என்ன ஆகும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!