India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நகரில் விளம்பர பதாகைகள் வைப்பது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சார்பில் இன்று (ஜூலை 5, 2025) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரகுமார் குப்தா மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
திண்டிவனம் சந்தைமேடு புறவழிச்சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவில் திருடி சென்றனர். சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்டத் தலைவர் எம்.ஐ சகாபுதீன் கலந்து கொண்டனர் .
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ‘ போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் பல்வேறு அறக்கட்டளை சார்பில் 57 அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பாராட்டி, மாவட்ட எஸ்.பி சரவணன் மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் சந்துருவை நேரில் அழைத்து பாராட்டினார். உடன் சரோஜினி கல்வி அறக்கட்டளை நிறுவனர் அருள்ராஜ் பங்கேற்றார்.
செஞ்சி பேரூராட்சி சக்கராபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் – சுமித்ரா தம்பதியரின் 2 வயது மகள் மதுமிதா, இன்று (ஜூலை 04) விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறிய பாத்திரத்தைத் தலையில் மாட்டிக்கொண்டார். பெற்றோர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாத்திரத்தை அகற்றினர்.
கோலியனூர் தெற்கு ஒன்றியம், அத்தியூர் திருவாதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற 2025-2026ஆம் ஆண்டிற்கான ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் துவக்கி வைத்து காய்கறிகள் விதைத்தொகுப்பு, பழச்செடிகள் தொகுப்புகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.