Villupuram

News January 8, 2025

விழுப்புரத்திற்கு வருகை தரும் முதலமைச்சர்.. என்ன காரணம்?

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், விழுப்புரத்தில் கடந்த நவ.8, 29 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஃபெஞ்சல் புயல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் ஜன.27, 28 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 8, 2025

மறியலில் ஈடுபட்ட 75 பேர் காலையில் கைது; மாலையில் விடுவிப்பு

image

விழுப்புரம் நகராட்சி திடல் பகுதியில் நேற்று (ஜன.7) காலை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

News January 8, 2025

விழுப்புரம் மாவட்ட போலீசார் பதக்கம் வென்று அசத்தல்

image

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீசார் கடந்த 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலட்சுமி அவர்கள் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் திருமதி.வரலட்சுமி 400 மீட்டர் தடை தாண்டு ஓட்டம் மற்றும் நடை போட்டியில் பதக்கங்கள் வென்றனர்

News January 8, 2025

கண்டமங்கலம் அருகே கார் மோதி ஒருவர் பலி

image

புதுவை அரியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கண்டமங்கலம், பள்ளித்தென்னல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் வேல்முருகன் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.7) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 8, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 7, 2025

விழுப்புரத்தில் மொத்தம் 17,16,718 வாக்காளா்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 8,45,132 ஆண்கள், 8,71,355 பெண்கள், 231 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 17,16,718 வாக்காளா்கள் உள்ளனா். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் 1,092 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 1,116 வாக்காளா்கள் உள்ளனா். இதில், விழுப்புரம் அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும், மயிலம் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளன.

News January 7, 2025

விவசாயிகளின் சாதியை கேட்டதால் பரபரப்பு

image

பொங்கல் பரிசுக்கு வழங்கப்படும் கரும்புக்கு, அதிகாரிகள் விவசாயிகளின் சாதியை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிடாகம் பகுதியில் கரும்பு கொள்முதல் செய்யும் அதிகாரிகள், “முதலில் நீங்கள் என்ன சாதி’ என்று கேட்கிறார்கள்.அதற்கு, ‘விவசாயிகளுக்கு ஏது சாதி, நாங்கள் சாதி பாகுபாடு இல்லாமல் தான் விவசாயம் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News January 6, 2025

முதல்வரை சந்தித்து வாழ்த்தப்பட்ட விழுப்புரம் எம்.பி

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் எம்.பிக்கு தமிழக அரசு சார்பில் அண்ணல் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 6) மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இருந்தனர்.

News January 6, 2025

முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்த எம்.பி

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு 2024ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் தலைமை செயலகத்தில் இன்று (ஜன.6) முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

News January 6, 2025

விழுப்புரம்: புதிய வாக்காளர் பட்டியல் வெளியானது

image

தமிழகம் முழுவதும் இன்று 234 தொகுதிக்கான புதிய வாக்காளர் பட்டியல் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் வாக்காளர் பட்டியல் வெளியிட்டனர். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் அடங்கிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 17,16,818 வாக்காளர்கள் உள்ளனர்.

error: Content is protected !!