Villupuram

News September 20, 2025

விழுப்புரம்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News September 20, 2025

B.sc படித்திருந்தால் விழுப்புரத்திலேயே அரசு வேலை

image

விழுப்புரம் சமூக நல அலுவலகத்தில் IT Assistant-க்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. B.sc CS அல்லது IT பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. இந்த <>விண்ணப்பத்தை <<>> பூர்த்தி செய்து இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தபால் மூலம் செப்.22க்குள் அனுப்ப வேண்டும். SHARE IT

News September 20, 2025

விழுப்புரம்: 10th Pass போதும்! காவல் துறையில் வேலை…

image

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற கான்ஸ்டபிள், சிறைக் காவலர் போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 – 26 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்!

News September 20, 2025

கொலை வழக்கு: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை முன்பகை காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்த வழக்கில், விக்கிரவாண்டி தாலுக்கா கலித்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்கிற பாரதிதாசனை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 20, 2025

விழுப்புரம்: புரட்டாசி முதல் சனி! இதை மறக்காம பண்ணிருங்க!

image

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. தென்புத்தூர் கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஷேர்!

News September 20, 2025

மகன் கொலை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள அண்ணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மகன் ஹரிபிரசாத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில், திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமநாத் குமார் இன்று தீர்ப்பளித்தார். இதில், விநாயகம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

News September 20, 2025

விழுப்புரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 9 பிரதான மதகுகள் வழியாக 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

News September 20, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 20, 2025

உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (19.09.2025) நடைபெற்றது. உடன் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News September 19, 2025

BREAKING: விழுப்புரம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பலி

image

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள  கொங்கராயநல்லூரை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள்  அண்ணன் ராமச்சந்திரன் – தம்பி சின்ராசு  இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!