India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆங்கிலப் புத்தாண்டு அன்று மதியம் சுமார் 03.10 மணியளவில் சூர்யா கடற்கரைக்கு வந்த குடும்பம் சுமார் 2,50,000ம் மதிப்புள்ள நகையை தொலைத்து விட்டனர். அப்போது பணியில் இருந்த ஊர்காவல் படை வீரர்கள் செல்வபாண்டியன், புருஷோத்தமன் ஆகியோர் தொலைந்த நகையை கண்டுபடித்து கொட்டகுப்ப காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவிடம் நேற்று (ஜன.10) ஒப்படைத்தனர்.
வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன்னுடைய வீட்டின் அருகில் கடந்த 17.8.2020 அன்று விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தைத்திருநாளும் பொங்கல் பண்டிகையை ஒட்டி சமத்துவ பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் சேர்ந்து வண்ண கோலங்கள் மற்றும் செங்கரும்பு உடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (10.01.2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று (10.01.2025) நடைபெற்ற 2024 -உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக சங்க நிர்வாகிகளுக்கு நினைவுக் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உட்பட பலர் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வினை தொடங்கி அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறையினர் கோலப்போட்டி ஒன்றை நிகழ்ச்சியில் பலர் பங்கு பெற்றனர். வருவாய்த்துறை சார்ந்த பெண் அலுவலர்கள் கோல போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டனர். பங்கு பெற்றவர்களில் சிறந்த கோலம் போட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் மண்டபத்தில் ஜி ஐயர் சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகள் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்ட பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் எழுப்பிய படி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் இன்று (ஜன.10) விழுப்புரம் மாவட்ட அனைத்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, நாளை (ஜன.11) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கால அட்டவணை பின்பற்றி அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், “பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை எரிக்காமல் இயற்கை சார்ந்த பொருட்களை எரித்து போகி கொண்டாட வேண்டும்” என ஆட்சியர் பழனி தெரிவித்ததோடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.