India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
விழுப்புரம்- ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேசுவரம் (எண் 06109) ராமேசுவரம்-விழுப்புரம் (எண் 06110) ஆகிய சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறையாக சனி, ஞாயிறு இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த ரயில்கள் வரும் ஜூலை 12- முதல் 27ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இன்று ஜூலை 7ஆம் தேதி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ.வை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருது, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ஜூலை 7 அன்று பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வரும் ஜூலை 9, 2025 அன்று, நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவிச மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மு.அமைச்சருமான செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளிடம் புதிய வீட்டினை ஒப்படைத்தார் .உடன் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.
திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்று இன்று (ஜூலை 7) மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினார். உடன் கல்லூரி முதல்வர் போரசியார்கள், இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதுவாக உக்கிர ரூபத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர், இங்கு சாந்தமாக அருள்பாலிக்கிறார். லட்சுமி தேவி மடியில் இல்லாமல், நரசிம்மர் தனியாக சாந்தமாக காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
தமிழ்நாடு நாளை நினைவு கூறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி வரும் 10 ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.