Villupuram

News September 20, 2025

திண்டிவனத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

திண்டிவனத்தில் உள்ள ஏ. கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை, நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. எம்.எல்.ஏ. மஸ்தான் இந்த முகாமைத் தொடங்கி வைத்து, மருத்துவ முகாமின் சேவைகளை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர்.

News September 20, 2025

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

image

முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொளி காட்சி வாயிலாகப் பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி முன்னிலையில், புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறக்கப்பட்டது. இவ்விழாவில், ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்புரையாற்றினர்.

News September 20, 2025

ராமதாஸ் தனித்துப் போட்டி – இரண்டாக உடையும் பாமக

image

சமீபத்தில் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் தனித்துப் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய அரசியல் நகர்வுகள் தமிழக தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 20, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோதரர்கள்: பொன்முடி அஞ்சலி

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே (வெள்ளிக்கிழமை) நேற்று வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த கொங்கராயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

News September 20, 2025

விழுப்புரம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு

image

இந்திய தபால் துறையில் 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் பரந்த கட்டமைப்பை பயன்படுத்தி bsnl சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் வாயிலாக தபால் துறை கிளைகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் போன் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

News September 20, 2025

விழுப்புரம்: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

image

விழுப்புரம் மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <> கிளிக் <<>> செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

விழுப்புரம்: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

image

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT!

News September 20, 2025

விழுப்புரம்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News September 20, 2025

B.sc படித்திருந்தால் விழுப்புரத்திலேயே அரசு வேலை

image

விழுப்புரம் சமூக நல அலுவலகத்தில் IT Assistant-க்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. B.sc CS அல்லது IT பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. இந்த <>விண்ணப்பத்தை <<>> பூர்த்தி செய்து இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தபால் மூலம் செப்.22க்குள் அனுப்ப வேண்டும். SHARE IT

error: Content is protected !!