Villupuram

News September 21, 2025

விழுப்புரம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

விழுப்புரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இந்த இணையதளத்தில் <<>>அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News September 21, 2025

விழுப்புரம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

விழுப்புரம் மக்களே! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ உங்களுக்கு இனி கவலை வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. ஷேர் செய்யுங்கள்.

News September 21, 2025

விழுப்புரம் மக்களே 8th பாஸ் போதும் அரசு வேலை!

image

விழுப்புரம் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க இங்கே <>Click செய்க<<>>, 5. கடைசி தேதி: 30.09.2025. *அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க*

News September 21, 2025

விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

விழுப்புரம் மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI என்ற இணையதளத்தில் <<>>சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டு, ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE!

News September 21, 2025

விழுப்புரம்: புரட்டாசி அமாவாசைக்கு இவ்வளோ சிறப்பா!

image

விழுப்புரம் மக்களே! புரட்டாசியில் வரும் சனிக்கிழமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல இந்த மாதம் வரும் அமாவாசையும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். இந்த நாளில் அருகில் உள்ள நீர்நிலைகளில் திதி கொடுத்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News September 21, 2025

விழுப்புரம்: 10th போதும், சூப்பர் வாய்ப்பு!

image

விழுப்புரம் மக்களே! கான்ஸ்டபிள் பணிக்கு 3,665 பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 18-26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.18,200-ரூ.67.100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆக துடிக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 21, 2025

விழுப்புரம்: கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் பகுதியில் காவல் ஆய்வாளர் காமராஜர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போதை மாத்திரைகள், போதை ஊசி, கஞ்சா பொட்டலம் வைத்திருந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரேனும் போதைக்கு அடிமையாகி இருந்தால், 14446 கால் பண்ணி மறுவாழ்வுக்கான ஆலோசனைகளை பெறலாம்.

News September 21, 2025

விழுப்புரம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகிற 24ஆம் தேதி (புதன்கிழமை) திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மைத் துறை சார்பாக அரங்குகள் அமைத்து இயற்கை இடுபொருட்களை காட்சிப்படுத்துதல் மற்றும் பாரம்பரிய பயிர் ரகங்களை காட்சிப்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.20 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 20, 2025

முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், அய்யூர் அகரம் பாலம் அருகே, இன்று காலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!