Villupuram

News July 10, 2025

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரூட் ஷோ நடத்துகிறார். பின்னர், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். இந்தப் பயணம் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

News July 9, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

image

இன்று (09.07.2025) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி. வெ.ஆறுச்சாமி, தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.

News July 9, 2025

விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி

image

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம், செயல்படுத்தப்படுகிறது என வேளாண் துறை அறிவித்துள்ளது.

News July 9, 2025

விழுப்புரம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

image

விராட்டிக்குப்பம் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவர், கடந்த ஜூன் 6ம் தேதி 16 வயதுள்ள மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சாந்தமூர்த்தியை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். எஸ்.பி மற்றும் ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்று விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சாந்தமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News July 9, 2025

நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி

image

விழுப்புரத்தில் சான்று பெற்ற விதை நெல் மானியத்துடன் (1கி ரூ.20 மானியம்) 147.40 மெட்ரி டன், தரச் சான்று பெற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குரூ.7.87 கோடி மானிய உதவி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்.

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? 2/2

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News July 9, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை 1/2

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், விழுப்புரத்தில் மட்டும் 31 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04146-226417) தொடர்பு கொள்ளவும். SHARE IT தொடர்ச்சி

News July 9, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை

image

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நடைபெற உள்ளது. மாதம் ரூ.15700-58100 வரை சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களை <>இந்த இணையதளத்தில் <<>>அறியலாம். வரும் ஜூலை 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT

News July 9, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 08.07.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!