Villupuram

News September 22, 2025

விழுப்புரம்: நவராத்திரியில் இதை பண்ணுங்க!

image

நவராத்திரி வழிபாட்டை கொலு, கலசம், படம், அகண்ட தீபம் என 4 வழிகளில் மேற்கொள்ளலாம். கொலுவில், படிகளை 3, 5, 7, 9, 11 என ஒற்றைப்படையில், கிழக்கு/வடக்கு திசையில் அமைக்க வேண்டும். பொம்மைகளை பரிணாம வளர்ச்சிப்படி (முதல் படி ஓரறிவு,6ஆம் படி மனிதர்கள், 9ஆம் படி தேவியர்/கலசம்) 9ஆம் படியில் முப்பெரும் தேவியரும், கலசமும் வைப்பது அவசியம். விழுப்புரம் மேல்மலையனுர் அம்மன் கோயிலில் வழிபடுவது மிகவும் நல்லது.ஷேர்

News September 22, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

மரக்காணத்தில் UPSC ஊக்குவிப்புப் பயிற்சி முகாம்

image

இந்திய ஆட்சிப் பணி (UPSC) தேர்வர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் குமரவேல் ஒருங்கிணைத்த இந்தப் பயிற்சி முகாமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார். துணை கண்காணிப்பாளர் உமாதேவி, ஆய்வாளர் பரணிநாதன், பயிற்சியாளர் அழகு முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 21, 2025

இரா.லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமகவினர்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் சதீஷ் தலைமையில் 25 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

News September 21, 2025

“தமிழர்களின் வெற்றி சூத்திரம் இதுதான்”

image

தமிழர்களின் வெற்றி சூத்திரம் ஒன்றே ஒன்றுதான். ஆபத்து வரும்போது எல்லாம் ஒன்றிணைவார்கள், அச்சுறுத்தப்படும் போதெல்லாம் ஒன்று இனைவார்கள், ஒடுக்கப்படும்போது எல்லாம் ஒன்றிணைத்து வீரு கொண்டு எழுவார்கள். இதோ, இப்பொழுது நம் மண், மொழி, மானம், காத்திட தமிழ்நாடு மக்கள் ஓரணியில் திரண்டு போராடி வெல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரா.லட்சுமணன் உரையாற்றினார்.

News September 21, 2025

விழுப்புரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

விழுப்புரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த<<>> இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 21, 2025

எம்.எல்.ஏ அருளுக்கு பாமகவில் புதிய பொறுப்பு!

image

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராக உள்ள சேலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் இன்று முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, இவருக்கு பாமகவில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

News September 21, 2025

விழுப்புரம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

விழுப்புரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இந்த இணையதளத்தில் <<>>அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News September 21, 2025

விழுப்புரம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

விழுப்புரம் மக்களே! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ உங்களுக்கு இனி கவலை வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. ஷேர் செய்யுங்கள்.

News September 21, 2025

விழுப்புரம் மக்களே 8th பாஸ் போதும் அரசு வேலை!

image

விழுப்புரம் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க இங்கே <>Click செய்க<<>>, 5. கடைசி தேதி: 30.09.2025. *அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க*

error: Content is protected !!