India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்கள் பழுதுபார்த்தல், புனரமைப்பு பணிகளுக்கு ரூ.20 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இன்று(ஆக.04) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டிலிருந்து எந்த உதவியும் பெறாத தேவாலயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (ஆக.04) பெற்றுக்கொண்டார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ சார்பில், நன்நிலம் மகளிர் நில உடமைத்திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு நில உடமைக்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஆக.04) வழங்கினார். தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார் உள்ளார்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என்று மாவட்ட விதை ஆய்வுத்துறை இன்று(ஆக.04) அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண் அலுவலர் திருமதி சோபனா வெளியிட்டு செய்தியில்: ‘விதைகளின் தரம் பயிர் விளைச்சல் மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பயிர் நடவு செய்வதற்கு முன்பு விதைகளின் தரத்தை ஆய்வு செய்து பண விரயத்தை தடுக்க விதை பரிசோதனை அவசியம்’ என்றார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு. ஒட்டன் காடுவெட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் அரசு சார்பில் பணம் வழங்காததால் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்துள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்றைய (ஆக.4) குறை கேட்பு கூட்டத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் <
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டிற்குள் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லண்டனில் இருந்து இது வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.