India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் 29ம் தேதி தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 27ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாகச் சென்று பதிவு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <

2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் விழுப்புரம் அடுத்த காக்குப்பம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர், வீராங்கனைகள் விழாவில் கலந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், செப்டம்பர் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப். 26 காலை 11 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெறுகிறார். இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: 2012-ல் வானூர் வட்டம், பூத்துறையில், அரசுக்கு ₹28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, அப்போதைய எம்எல்ஏ பொன்முடி மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய டிஎஸ்பி சாட்சியம் அளித்தார். வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 8-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சேவை வரியை அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைத்துள்ள போதிலும், தமிழக அரசு வரி சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவில்லை என சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் லாப நோக்குடன் செயல்படாமல், தனது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் தொடா்பாக இடம் தோ்வு குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் 26 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 38 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காது கேளாதோர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான காதுகேளாதோர் தினம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.28) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் ‘பிங்க்’ நிற வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம், கிளியனூர், ஆரோவில் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு இளைஞர்களை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️DKP திருமண மண்டபம், மரக்காணம் ரோடு, திண்டிவனம்
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், ஆற்காடு
▶️பகிரதன் திருமண மண்டபம், வரிக்கல்
▶️சமுதாய கூடம், புதுரை
▶️முருகன் அடிகளார் திருமண மண்டபம், ராதாபுரம்
▶️ஸ்ரீ விஷ்ணு மஹால், பில்லூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.