Villupuram

News January 21, 2025

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (21.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News January 21, 2025

தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? – சீமான் கேள்வி

image

விக்கிரவாண்டி பகுதியில் கள் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற சீமான், “தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? கள் கடைக்கு அனுமதி அளித்தால், டாஸ்மாக் கடையில் வியாபாரம் குறைந்துவிடுமோ? தேசிய பானமான கள்ளுக்கு, தமிழகத்தை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது. உயிரை குடிக்கும் விஷக்கடைகளை திறக்கும் அரசு, கள்ளுக்கடைகளை திறக்க ஏன் மறுக்கிறது?” என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார். 

News January 21, 2025

துப்பட்டா பைக்கில் சிக்கி பெண் பலி

image

வேலூர் கண்ணமங்கலத்தை சேர்ந்த ஜம்ஷித் மனைவி தாஹிரா பானுவுடன் கடந்த 19ஆம் தேதி திண்டிவனத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் செஞ்சி சாலையில் தாஹிராவின் துப்பட்டா பைக்கில் சிக்கி கீழே விழுந்ததில் தாஹிரா படுகாயமடைந்தார். பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாஹிரா நேற்று (ஜன.20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 21, 2025

சொர்ணாவூர், கஞ்சனூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

image

கண்டமங்கலம் கோட்டம், சொர்ணாவூர் துணை மின் நிலையம் மற்றும் கஞ்சனூர் துணை மின் நிலையம் ஆகிய இரு இடங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த இரு மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் இடங்களுக்கு இன்று (ஜன.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 20, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 20, 2025

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தார்.

News January 20, 2025

வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் மாதாந்திர ஆய்வு

image

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில், மாதாந்திர ஆய்வினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனிவட்டாட்சியர் இருந்தனர்.

News January 20, 2025

வனத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வனத்துறை சார்பில் மாநில அளவிலான வன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தலைமையில் இன்று (20.01.2025) நடைபெற்றது. உடன் சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இருந்தனர்.

News January 20, 2025

விழுப்புரம் டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை

image

விழுப்புரம் புறவழிச்சாலை அருகே ஜானகிபுரத்தில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வழக்கம் போல பணியாளர் நேற்று இரவு 10 மணிக்கு கடையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இன்று 12 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, கடையின் சுவற்றில் துளையிட்டு 15 மது பாட்டில்கள், ரூபாய் 1000 கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 20, 2025

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (20.01.2025) நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!