India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆக.8) திண்டிவனம் நகராட்சி, கானை ஒன்றியம், விக்கிரவாண்டி ஒன்றியம், முகையூர் ஒன்றியம், மரக்காணம் ஒன்றியம் மற்றும் கோலியனூர் ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாளை ஆகஸ்ட் 8 திருவண்ணாமலை ஆடி பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் தமிழக போக்குவரத்துக் கழகம் செயலி வாயிலாகவோ இணையதளம் வாயிலாகவோ தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் SC, ST வன்கொடுமை சட்டம் புகார் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என செந்தாமரை என்பவர் புகார் மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி DSP சுனில் என்பவரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட காவல் துறை. மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரும்போது அருகே உள்ள காவலரது எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரியபடுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செஞ்சிக் கோட்டையை தெரிந்த பலருக்கும், இங்குள்ள சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றி தெரியவில்லை. சடையப்ப வள்ளல் பிறந்த ஊரான திருவெண்ணைநல்லூரில் உள்ள சிவன் கோயில், மண்டகப்பட்டில் மகேந்திரவர்மன் உருவாக்கிய குடைவரைக் கோயில், 8,000 சமணர்கள் வாழ்ந்த எண்ணாயிரத்தில் உள்ள கோயில் என பல உண்டு. புதுப்புது இடங்களுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று (ஆக.7 ) விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் திமுக மாவட்ட கழக பொருளாளர் இரா.ஜனகராஜ் , ஓய்வுபெற்ற காவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ‘கல்வி கடன் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி, மாவட்ட சிறுபான்மையின நல அலுவலர்கள் போன்ற இடங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி (ம) உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் முகையூர், காணை, வல்லம், மரக்காணம் திருவெண்ணைநல்லூர் வட்டாரங்களில் 100 ஹெக்டேர் பரப்பளவில் மானியம் பெற்று மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்க விவசாயிகள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுக விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை மறுநாள் (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியுடைய குழந்தைகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.