India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும்
பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2025) நடைபெற்றது.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலைகள்) ராஜகுமார் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், ஈசீஇ, ஐடி போன்ற கணினி சார்ந்த பாடப்பிரிவுகளை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்விற்கான சாய்ஸ் பில்லிங் செய்ய நாளை (ஆக.9) கடைசி நாள்.
வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (ஆக.9) காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் நாளை (ஆக.9) பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள ஜூனியர் பைண்டிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. எனவே சம்பளம்: ரூ.19,500/- முதல். தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும், பணியிடம்: தமிழ்நாடு கடைசி நாள்: 29.08.2025
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆக.9) ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் மற்றும் கைபேசியின் பதிவு மாற்றம் போன்ற சேவைகளுக்கு மனு அளிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் 8-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தமுமுக வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்துல் ஹக்கீம் நடத்தி வந்த உரக் கம்பெனியில் பணிபுரிந்த பெண்களுக்கு ஆபாசமாக செய்திகள் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெண்களில் உறவினர்கள் அப்துல் ஹக்கீமின் உரக் கம்பெனியை அடித்து நொறுக்கினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆக.8) திண்டிவனம் நகராட்சி, கானை ஒன்றியம், விக்கிரவாண்டி ஒன்றியம், முகையூர் ஒன்றியம், மரக்காணம் ஒன்றியம் மற்றும் கோலியனூர் ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.