India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.01.2025 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகைமாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என சீமான் பேசி இருந்தார். இது தொடர்பான வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இதில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைவிசாரித்த நீதிமன்றம் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என தீர்ப்பளித்தது.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நஷீர் பாஷா என்பவர் 2017 ஆம் ஆண்டு எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம்விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நாளை (ஜன.23) நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கலாம். இதில், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், வேண்டிய சேவைகள், அரசின் திட்டங்களின் நிதி சேவைகளின் குறைபாடு குறித்து நேரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் வர உள்ளனர்
வளவனூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் 17ம் தேதி வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் விசாரித்ததில் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரது தாய் தோசையில் விஷம் கலந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் தாயை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரிக்கையில், விஸ்வலிங்கம் காதலியும் இணைந்து கொலை செய்தது தெரிய வந்ததையடுத்து அவரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் நகராட்சி கமிஷனராக வீரமுத்துக்குமார் பணிபுரிந்தார். இவர், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் நகராட்சி கமிஷனராக வேலுார் மாநகராட்சி உதவி ஆணையராக இருந்த வசந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாதந்தோறும் மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது போல, கோட்ட அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் கோட்டத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (ஜன.22) காலை 10.30 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார். ஜனவரி 27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்று பல்வேறு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவுள்ளார். இதில், பயன்பெறும் பயனாளிகளுக்கான தேர்வு பட்டியலை தயார் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
விழுப்புரம் கோட்டத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (ஜன 22) காலை 10.30 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா் திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளவனூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் 17ம் தேதி வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் விசாரித்ததில் விஸ்வலிங்கம் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரது தாய் தோசையில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. சந்தேகம் வராமல் இருக்க உறவினர்கள் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.