Villupuram

News September 25, 2025

விழுப்புரம்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen portal<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News September 25, 2025

விழுப்புரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News September 25, 2025

விழுப்புரத்தில் கல்விக்கடன் திருவிழா

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் செயல்படும் ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் நாளை கல்விக்கடன் திருவிழா நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்குத் தேவையான நிதியுதவியைப் பெற உதவும்.

News September 25, 2025

விழுப்புரம் மாவட்டத்துக்கு பெருமை சேருங்கள் – ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்து, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், விழுப்புரம் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

News September 25, 2025

விழுப்புரம்: 10th போதும், அஞ்சல் துறையில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32,500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 40 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 25, 2025

விழுப்புரத்தில் கரண்ட் கட்!

image

விழுப்புரத்தில் கஞ்சனூர், திருவெண்ணெய்நல்லூர், செந்தூர் ஆகிய துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், செந்தூர், அவ்வையார்குப்பம், சென்னநெற்குணம் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

News September 25, 2025

விழுப்புரம்: லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் புன்னைவனம் என்பவர், நாராயணன் என்பரிடம் வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

News September 25, 2025

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.25) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.மனோன்மணி அம்மாள் திருமண மண்டபம், கோட்டக்குப்பம் 2.அஞ்சுகம் திருமண மஹால், ஆண்ட்ராயனூர் 3.நாடக மேடை வளாகம், கடலி 4.ஊராட்சிமன்ற கட்டிட வளாகம், புலியனூர் 5.முருகன் அடிகளார் திருமண மண்டபம், ராதாபுரம் 6.ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், கஞ்சனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News September 25, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.25) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️மனோன்மணி அம்மாள் திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
▶️அஞ்சுகம் திருமண மஹால், ஆண்ட்ராயனூர்
▶️நாடக மேடை வளாகம், கடலி
▶️ஊராட்சிமன்ற கட்டிட வளாகம், புலியனூர்
▶️முருகன் அடிகளார் திருமண மண்டபம், ராதாபுரம்
▶️ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், கஞ்சனூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News September 25, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!