Villupuram

News August 9, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்… கூட்டுறவு வங்கியில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

இருசக்கர வாகனத்தில் வைத்த பணம் திருட்டு

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லாலிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95,000 திருடப்பட்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ. 59,000 மற்றும் வீட்டில் இருந்து எடுத்து வந்த ரூ.36,000 என மொத்தம் ரூ.95,000 திருடப்பட்டுள்ளது. செஞ்சி – தி.மலை சாலையில் உணவகத்தில் உணவருந்திய போது சம்பவம் நடந்துள்ளது.

News August 9, 2025

மாநில கல்விக் கொள்கையில் தவறான முடிவு – விழுப்புரம் எம்பி

image

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று இன்று ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இது தவறான முடிவு என்றும் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வி.சி.க எம்.பி ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

News August 8, 2025

விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் கிழக்கு பாண்டி சாலை பகுதியில் மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில், தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

News August 8, 2025

திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில்

image

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் அதிக போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

News August 8, 2025

மயிலம் தொகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

மயிலம் தொகுதியில் நாளை (ஆக.9) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநலம், மூட்டுவலி, நரம்பியல் மருத்துவம், இருதய பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான கர்ப்பபை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

திண்டிவனம்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை.

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) அதிகாலை மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போடவே தப்பி ஓடியோள்ளார். போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் பத்மநாபன் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்.

News August 8, 2025

விழுப்புரத்தில் நாளை ரத்ததான முகாம்

image

நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆச்சார்யா பள்ளி, சரோஜினி கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் மற்றும் மனிதம் காப்போம் அறக்கட்டளை இணைந்து சாலாமேட்டில் உள்ள ஆச்சார்யா சிக்ஷ மந்திர் பள்ளியில் நாளை காலை 9 முதல் மதியம் 1 மணிவரை ரத்ததான முகாமை நடத்த உள்ளது. இந்த ரத்ததான முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய 4 வழி சாலை

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் – புதுச்சேரி இடையே 4 வழி சாலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஆக.8) டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2,157 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

விழுப்புரம் : SBI வங்கியில் ரூ.64,000 சம்பளத்தில் வேலை

image

விழுப்புரம் மக்களே! ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழகம் முழுவதும் 380 கிளர்க் பணியிடிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிகிடி போதும். 20 – 28 வயது வரை நிரம்பியவர்கள், இம்மாதம் 26-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!