India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரத்தைச் சேர்ந்த குபேந்திரன், சுரேஷ்பாபு ஆகிய இருவரும், நேற்று மாலை விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நல்லரசன்பேட்டை பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி பைக் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <

விழுப்புரம் மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு வரும் செப்.28 நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த குபேந்திரன், சுரேஷ்பாபு ஆகிய இருவரும், இன்று மாலை விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நல்லரசன்பேட்டை பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.26) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️VPRC கட்டிட வளாகம், அவ்வையார்குப்பம்
▶️KMS மீனாட்சி திருமண மண்டபம், கண்டாச்சிபுரம்
▶️JK பாபு மஹால், மட்டப்பாறை
▶️கமலா திருமண மண்டபம், கலித்திராம்பட்டு
▶️ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், கட்டளை
▶️VVA திருமண மண்டபம், செஞ்சி ரோடு, தென்னமாதேவி
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பிரதமரின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. செப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் பயன்பெற்ற மாணவர்கள், இங்கு <

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலவாழ்வு) மரு.லதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், மாவட்ட துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.சுதாகர் உள்பட பலர் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (செப். 25) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயக் கிணறுகளுக்கு, விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஏரிக்கரை உடைப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 8 பெண்களை, நேற்று (செப். 24) குளவி கொட்டியது. இதில் காயமடைந்த அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அவர்களில் சின்னக்குழந்தை (75) என்ற மூதாட்டி, இன்று (செப். 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.