Villupuram

News January 26, 2025

விழுப்புரம் காவல் ஆய்வாளருக்கு காந்தியடிகள் காவலர் விருது

image

நாடு முழுவதும் இன்று 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்குபவர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்கு பதக்கங்களும், கேடயங்களும் வழங்கப்படும். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்னகாமனனுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட்டது. ஷேர் செய்யவும்..

News January 26, 2025

முதல்வர் மருந்தகம் அமைக்க பிப்.5ம் தேதி கடைசி நாள்

image

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் (அ) அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க பிப்.5ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சியளித்து மானியம் விடுவிக்கப்பட்டு மருந்தகம் அமைப்பதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்திய பின் மருந்துகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2025

டாஸ்மாக் விற்பனையில் விழுப்புரம் முதலிடம்

image

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் விற்பனை அளவைவிட ரூ.47 கோடி அதிகமாகும். வழக்கமாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களே விற்பனையில் முதலிடத்தில் இருக்கும். இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் விழுப்புரம் மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளன.

News January 25, 2025

அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்- அண்ணாமலை

image

விழுப்புரம் பேரங்கியூர் அரசு பள்ளி மாணவர்கள் ஆற்றங்கரையில் ஊற்று தோண்டி தண்ணீர் குடிப்பதாக வீடியோ வெளியாகி வைரலானது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் இல்லையேல், பாஜகசார்பாக, ஒரு இயக்கமாக முன்னெடுத்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.

News January 25, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 25, 2025

குடமுழுக்கு விழாவில் சீரியல் லைட் போட்ட கல்லூரி மாணவர் பலி

image

விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு இன்று ஹரிஹரன் என்ற கல்லூரி மாணவர் சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News January 25, 2025

முதலமைச்சர் வருகையொட்டி முன்னாள் அமைச்சர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளார். திண்டிவனத்தில் அதற்க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று முன்னாள் அமைச்சர் மஸ்தான் அவர்கள் நேரில் சென்று விழா நடைபெறும் அரங்கத்தை பார்வையிட்டார். உடன் மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், சிறுபான்மை அணி அமைப்பாளர் அன்சாரி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

News January 25, 2025

குடியரசு தின விழா: விழுப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

நாட்டின் 76-வது குடியரசு தின விழா நாளை (ஜன 26) நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி விழுப்புரம் ரயில் நிலையம், புதிய, பழைய பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ரயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  போலீசார் தீவிரமாக சோதனை செய்யும் பணியில் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 25, 2025

விழுப்புரத்தில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்

image

பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் இன்று நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 25, 2025

விழுப்புரம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

image

விழுப்புரம் மாவட்ட நகராட்சி புதிய ஆணையராக எம்.ஆர். வசந்தி நேற்று (ஜன.24) மாலை பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன் வேலூர் மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார். புதிய ஆணையருக்கு அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துகளை தெரிவித்தனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

error: Content is protected !!