Villupuram

News September 26, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

விழுப்புரம்: விஜய் வரும் தேதியில் மாற்றம்

image

தவெக தலைவர் விஜய் விழுப்புரத்தில் நவ.8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.15இல் தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT

News September 26, 2025

விழுப்புரம்: விஜய் வரும் தேதியில் மாற்றம்

image

தவெக தலைவர் விஜய் விழுப்புரத்தில் நவ.8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.15இல் தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT

News September 26, 2025

விழுப்புரத்தில் கொலை வழக்கு குற்றவாளி கைது

image

விழுப்புரத்தில் 2020ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளி விவேக் என்பவர், 2024 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்ரோடு பகுதியில் போலீசார் அவரை கைது செய்தனர். தலைமறைவு குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் பாராட்டினார்.

News September 26, 2025

விழுப்புரம்: மின்கம்பி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 13 ,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடக்க இருப்பதால் இதற்கான விண்ணப்ப படிவம் விளக்க குறியீட்டை http://skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம்-604102 என்ற முகவரிக்கு அனுப்ப விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

News September 26, 2025

விழுப்புரம் மக்களுக்கு எச்சரிக்கை

image

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

BREAKING: செஞ்சி அருகே பாய்லர் வெடித்து இளைஞர் பலி

image

செஞ்சி வட்டம், செம்மேடு கிராமத்தில் இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலையில் இன்று (செப்.26) காலை பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் அங்கு பணிபுரிந்த புருஷோத்தமன் (27) என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லான்பிள்ளைபெற்றாள் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 26, 2025

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 31 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வளவனூர் 26 மில்லி மீட்டர், வானூர் 24 மில்லி மீட்டர், கோலியனூர் 24 மில்லி மீட்டர், விழுப்புரம் 18 மில்லி மீட்டர், திருவெண்ணெய்நல்லூர் 11.2 மில்லி மீட்டர், திண்டிவனம் 4.2 மில்லி மீட்டர், வளத்தி 4 மி.மீ, நேமூர் 3.2 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News September 26, 2025

விழுப்புரம்: ஒரு பஃப்ஸ்! ரூ.60,040 அபராதம்!

image

திண்டிவனம் சினிமா திரையரங்கில், கொஞ்சமங்கலத்தைச் சேர்ந்த ஞானவேல் (26) என்பவருக்கு ₹30-க்கு விற்க வேண்டிய பஃப்ஸ் ₹50-க்கு விற்கப்பட்டது. இது குறித்து அவர் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஆணையம், நஷ்ட ஈடாக ₹50,000, வழக்குச் செலவாக ₹10,000, ஆகியவற்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க திரையரங்கு நிர்வாகத்திற்கு நேற்று உத்தரவிட்டது.

News September 26, 2025

விழுப்புரம்: டிப்ளமோ போதும், ரூ.1.20 லட்சம் சம்பளம்!

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் டிப்ளமோ/பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். (SHARE)

error: Content is protected !!