Villupuram

News September 27, 2025

குரூப் 2 தேர்வு முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் – ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.28) நடைபெறும் குரூப் 2 தேர்வில் 14,814 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதையடுத்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வு ஏழுதுவோர்க்கு ஏதுவாக, தேர்வு மையங்கள் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் காலை 6 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

News September 27, 2025

கள்ளக்குறிச்சி: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

விழுப்புரம் மக்களே.., வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

News September 27, 2025

விழுப்புரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

image

விழுப்புரம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நாளை(செப்.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விழுப்புரம் சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன், அரவிந்த் கண் மருத்துவமனை & விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 89வது தொடர் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கண் சம்பந்தமாக பல்வேறு பரிசோதனை நடத்தப்பட உள்ளதால் பொதுமக்கள், பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2025

விழுப்புரம்: மின்கம்பி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 13 ,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடக்க இருப்பதால் இதற்கான விண்ணப்ப படிவம் விளக்க குறியீட்டை http://skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம்-604102 என்ற முகவரிக்கு அனுப்ப விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

News September 27, 2025

விழுப்புரம் : அரசு பள்ளி அருகே குட்கா; ஒருவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கையில் குட்கா பாக்கெட்டுகளுடன் நின்றிருந்த புத்தனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News September 27, 2025

விழுப்புரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது

image

விழுப்புரம் அருகே உள்ள சாலை அகரம் கிராம நிர்வாக அலுவலகத்தில், VAO சதீஷ் என்பவர் பட்டா வழங்குவதற்காக ரூ. 20,000 லஞ்சம் வாங்கியபோது, நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News September 27, 2025

விழுப்புரம் மக்களுக்கு எச்சரிக்கை

image

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2025

விழுப்புரம்: மின்கம்பி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 13 ,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடக்க இருப்பதால் இதற்கான விண்ணப்ப படிவம் விளக்க குறியீட்டை http://skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம்-604102 என்ற முகவரிக்கு அனுப்ப விழுப்புரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

News September 27, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!