India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கலையரசன், 20. இவர், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வைத்து, அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார், கலையரசனை நேற்று கைது செய்தனர்.
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர்,மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 515 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் திண்டிவனத்தில் இன்று (ஆக.11) நடைபெறவிருந்த பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் ஒத்திவைப்பு. இன்று நடைபெறவிருந்த நடைபயணம் நாளை மறுநாள் (ஆக.13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக நடைபயணம் நடைபெறும் என்று விளக்கம்.
திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளான எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் மாணவர் சேர்க்கைக்கு நாளை ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வும், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதுநிலை அனைத்து பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் நாராயணன் தெரிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
விழுப்புரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.
விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான திண்டிவனம் மற்றும் விழுப்புரம் பொறியியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு நாளை (ஆக.11) முதல் ஆக.18 வரை நடைபெற உள்ளது. அதன்பின் ஆக.18 முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கல்லூரி நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.