Villupuram

News August 12, 2025

பயனாளிகளுக்கு நில உடைமைக்கான ஆவணங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு கூட்டத்தில், தாட்கோ சார்பில், நன்நிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு நில உரிமைக்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஆக.11) வழங்கினார். உடன் தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.

News August 11, 2025

முன்னாள் படைவீரர்கள் மூன்று சக்கர வாகனம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.11) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.

News August 11, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்டு 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

குடிமனைப் பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை

image

மயிலம் அருகே தி.கேணிப்பட்டு கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்ற நத்தம் புறம்போக்கு நிலம் இருக்கின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கண்ட இடத்தில் தான் இம்மக்கள் வசித்து வந்ததாக குறிப்பிடுகின்றனர் இந்த இடத்தில் குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென பட்டியல் சமூகத்தினர் மக்கள் இன்று (ஆக11) மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் .

News August 11, 2025

விழுப்புரம் – முண்டியம்பாக்கம் ரயில் ரத்து

image

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், முண்டியம்பாக்கத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ளது, மறுமார்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆக.23 அன்று மட்டும் இந்த பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

விழுப்புரம்: உள்ளூரிலேயே வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

image

விழுப்புரத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 100 Insurance Agent பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th படித்த 18 வயது முதல் 45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

BREAKING: விழுப்புரம் மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ள மாணவர்கள் கவனமாக வரவும். வெளியே செல்லும் குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

விழுப்புரம்: உள்ளூரிலேயே வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

image

விழுப்புரத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 100 Insurance Agent பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th படித்த 18 வயது முதல் 45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கலையரசன், 20. இவர், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வைத்து, அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார், கலையரசனை நேற்று கைது செய்தனர்.

News August 11, 2025

விழுப்புரம்: மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர்,மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 515 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து நாளைக்குள் (ஆக.12) விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!