India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் வட்டம், வாணியம்பாளையம் கோவிலில் இன்று (செப். 27) சனிக்கிழமையை முன்னிட்டு, நவகிரக சாமிகளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகள் அவரால் மீறப்பட்டுள்ளனவா?
இதுகுறித்து தமிழக முதல்வர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று(செப்.27) திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக அரசு, பள்ளி ஆசிரியர்களை கொத்தடிமையாக நடத்துவதாகவும், காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்துவதாகவும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று(செப்.27) திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக அரசு, பள்ளி ஆசிரியர்களை கொத்தடிமையாக நடத்துவதாகவும், காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்துவதாகவும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது சட்ட விரோதமான செயல். அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் வழக்கு தொடர உள்ளோம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விழுப்புரத்தில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில், காலாண்டுத் தேர்வு விடுமுறை இன்று (செப்டம்பர் 27) தொடங்குகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
விடுமுறைக் காலத்திலேயே, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி விடுமுறையாக இருந்தாலும், அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு, டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18,000/- நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
Sorry, no posts matched your criteria.