India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் ஜூலை 12-ம் தேதி குடும்ப தகராறில் தனது மனைவி லாவண்யா, தாய் பச்சையம்மாள், மற்றும் சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டதில் தம்பி கார்த்திக், மனைவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில் தென்னரசு என்பவர் கைது செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று(ஆக.12) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் செ.குன்னத்தூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலந்துள்ளதால் 30க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குன்னத்தூர் கிராம மக்கள் இன்று(ஆக.12) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் குடைவரைக் கோயிலின் வரலாறு தெரியுமா? குடைவரைக் கோயில் என்பது பெரும் பாறையை குடைந்து சென்று அதில் அமைக்கப்படும் கோயில் ஆகும். கோயிலில் அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் இரண்டும் வேறுபட்டு காட்சியளிக்கும். ஒரு முறையேனும் இங்கு சென்று பார்க்கவேண்டும் என உங்கள் நண்பருக்கு இதை ஷேர் செய்து அழைத்து செல்லுங்கள்
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா இன்று (ஆக.12) அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை RMO.Dr.ரவிக்குமார், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in ) இணையதளத்தின் தெரிந்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை விழுப்புரத்தில் 7,936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே விழுப்புரம் நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT
▶️நகராட்சி- 3 (விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம்)
▶️பேரூராட்சிகள்- 7
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா- 9
▶️வருவாய் குறுவட்டம்- 34
▶️வருவாய் கிராமங்கள்-928
▶️ஊராட்சி ஒன்றியம்-13
▶️கிராம பஞ்சாயத்து-497
▶️MP தொகுதி-1 (விழுப்புரம்)
▶️MLA தொகுதி- 7
▶️மொத்த பரப்பளவு – 3725.54 ச.கி.மீ
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாரத்தில் டி.பி.ஆர் மஹால், வல்லம் வட்டாரத்தில் மேல்ஒலக்கூர் அரசு உயர்நிலை பள்ளி, கண்டமங்கலம் வட்டாரத்தில் குமுளம் சமுதாக கூடம், மரக்காணம் வட்டாரத்தில் என்.எம்.வி மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் தாதாபுரம் அரசு உயர்நிலை பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் கொண்டங்கி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாரத்தில் டி.பி.ஆர் மஹால், வல்லம் வட்டாரத்தில் மேல்ஒலக்கூர் அரசு உயர்நிலை பள்ளி, கண்டமங்கலம் வட்டாரத்தில் குமுளம் சமுதாக கூடம், மரக்காணம் வட்டாரத்தில் என்.எம்.வி மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் தாதாபுரம் அரசு உயர்நிலை பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் கொண்டங்கி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.