India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதன்படி, செஞ்சி-K.S.மஸ்தான்(DMK), மைலம்-C.சிவக்குமார்(PMK), திண்டிவனம் (தனி)-P.அர்ஜீனண் (ADMK), வானூர் (தனி)-M. சக்கரபாணி (ADMK), விழுப்புரம்-R.இலட்சுமணன் (DMK), விக்கிரவண்டி-அன்னியூர் சிவா (எ) A. சிவசண்முகம் (DMK), திருக்கோயிலூர்-K.பொன்முடி (DMK) ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். உங்கள் தொகுதி MLA செயல்பாடுகள் குறித்து Comment பண்ணுங்க!

விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி II மற்றும் IIA) இன்று(28.09.2025) நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்கள் தேர்வு எழுதுவதை, மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். நல் உள்ளம் கொண்ட விழுப்புரம் மக்களே இதனை SHARE பண்ணுங்க

விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் ஆண்டுதோறும் செப்டம்பர் 4ம் ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறுகள் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கிபி 1037ம் ஆண்டு சோழர் கால கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மூஞ்சி ஆற்றின் விவரங்களை வெளிக் கொணர வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இங்கு கிளிக் <

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையில் நாளை உரையாற்றவுள்ளார். செப். 29 முதல் அக். 8வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்னை குறித்து அவர் பேசவுள்ளார். இதையடுத்து பொதுமக்கள், பாமகவினர் பலரும் சிவக்குமார் எம்எல்ஏவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கமம் சர்வீஸ் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 89வது இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (செப். 28) நடைபெறுகிறது. விழுப்புரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், கண் பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனை வழங்கப்படும். பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.