India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர் ஜினோ கார்டிஸ் ஜோசப் முதல் இடம் பெற்று ரூ. 5,000 பரிசுத் தொகை பெற்றுள்ளார். இந்த மாணவர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு வருடங்களாக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அவர்கள் பணி உயர்வு பெற்று மாவட்டத்தில் இருந்து விடை பெற இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் நமது மனிதம் காப்போம் சார்பாக மாலை 3 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை செலுத்த உள்ளார்கள். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட எட்டு பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (ஜன.31) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜராகவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் மாதந்தோறும் நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் பிப்.7ம் தேதி நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பட்டாமாற்றம்,ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, நிலம் கையகம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
நீண்ட காலத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 62வது ரேங்குடன் தேர்ச்சி பெற்ற ஷேக் அப்துல் ரகுமான் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேற்று (ஜன.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய ஆண்டில் பழைய பொய். பாஜக அரசு தயாரித்துள்ள உரையை குடியரசுத் தலைவர் படித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் படித்த உரையில் இடம்பெற்றிருந்த அதே செய்திகள் இந்த ஆண்டும் இடம் பெற்றுள்ளன. மேலும், பட்ஜெட்டிலும் புதிய அறிவிப்புகள் இருக்காது என்பதை அது உணர்த்துகிறது’ என தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
வானூா் வட்டம், நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் அதேபகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஜன.31) மாவு அரைப்பதற்காக வீட்டிலிருந்த கிரைண்டரை அவர் போட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வானூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசின் ஆதரவு விலை ரூ.101 கோடி மற்றும் 2004-2005, 2008-2009 ஆம் ஆண்டுக்கான லாபத்தில் 50 சதவீத பங்கு தொகையான ரூ.13 கோடி என மொத்தம் ரூ.114 கோடி கரும்புக்கான நிலுவை தொகையினை வழங்க வலியுறுத்தி வருகின்ற பிப்.6ம் தேதி முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் செய்யவும்..
தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி-யை மாற்றம் செய்து, ஷேக் அப்துல் ரகுமான் என்பவரை விழுப்புரம் புதிய மாவட்ட ஆட்சியராக அரசு அறிவித்துள்ளது. மேலும், கூடுதல் ஆட்சியராக பத்மஜா என்பவரை நியமனம் செய்து அரசு அறிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலைப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் இன்று (ஜன.31) நடைபெற்றது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.