Villupuram

News October 1, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

விழுப்புரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 30, 2025

விழுப்புரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

விழுப்புரம் வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது(தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் இந்த லிங்க் மூலம் விண்ணபிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.15,000 உதவித்தொகை உண்டு. வங்கி வேலைக்கு போக நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க

News September 30, 2025

விழுப்புரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News September 30, 2025

விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று 33-வது பிறந்தநாள்

image

தென் ஆற்காடு வள்ளலார் மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் தனி மாவட்டமாகப் பிரிந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்து, 33-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல்வேறு சிறப்புகளையும், தொன்மையையும் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இந்த மைல்கல்லை, சமூக வலைதளங்களில் “விழுப்புரம் 33”, “WE ARE FROM விழுப்புரம்” என்ற ஹேஷ்டேகுகளுடன் கொண்டாடி வருகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து, நம்ம ஊர் பெருமைய சொல்லுங்க

News September 30, 2025

விழுப்புரம் வருவாய்த் துறையில் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ஹரிதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, கலெக்டர் அலுவலக அ. பிரிவு பானு சித்தலிங்க மடம் அலுவலகத்திற்கும், கலால் அலுவலக ஆய்வாளர் வாசுதேவன் வானூர் தாலுகாவிற்கும், திண்டிவனம் கலால் அலுவலக ஆய்வாளர் சரவணன் கண்டமங்கலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 30, 2025

விழுப்புரம்: B.E/ DIPLOMA/ டிகிரி படித்தவர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் <>இந்த<<>> லிங்க் மூலம் வரும் அக்.18க்குள் விண்ணபிக்கலாம். இந்த ஒரு வருட பயிற்சி காலத்தில் மாதம் ரூ.9000 உதவித்தொகை வழங்கப்படும். SHARE பண்ணுங்க

News September 30, 2025

விழுப்புரத்தில் போராட்டம் நடத்த இடங்கள் குறித்து எஸ்.பி. அறிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வரும் காலத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தக்கூடிய இடங்களைக் கண்டறிந்து, அதன் ஆய்வறிக்கையை எஸ்.பி. மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளார். விழுப்புரத்தில் மந்தக்கரை, வண்டிமேடு நுழைவாயில் தெருமுனை மற்றும் திண்டிவனத்தில் ஆர்.எஸ். பிள்ளை வீதி, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகள் போராட்டங்கள் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

News September 30, 2025

விழுப்புரம்: ரேஷன் பொருள் தரமில்லையா?

image

விழுப்புரம் மக்களே, நீங்கள் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், ஊழியர் நேரத்திற்கு வரத் தவறினால் அல்லது கூடுதல் தொகை வசூலித்தால் கவலை வேண்டாம்! உங்கள் குறைகளைத் தெரிவிக்க இனி தயங்க வேண்டாம். உடனடியாகப் புகார் அளிக்க, <>இங்கே<<>> கிளிக் செய்யுங்கள். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முக்கியத் தகவலை SHARE பண்ணுங்க

News September 30, 2025

விழுப்புரம் மக்களே அரசுத் துறைகள் உங்கள் அருகாமையில்!

image

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக அரசின் 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உங்கள் பகுதிகளுக்கே வந்து மனுக்களைப் பெற உள்ளனர். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த முகாம்கள் உங்கள் அருகில் எங்கு நடைபெறுகிறது என்பதை <>இங்கே <<>>கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!