Villupuram

News August 15, 2025

விழுப்புரம்: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 15, 2025

விழுப்புரத்தில் புதிய தாழ்தளப் பேருந்துகள் விரைவில் இயக்கம்

image

விழுப்புரம் கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 புதிய தாழ்தளப் பேருந்துகளில் 10 பேருந்துகளுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றில் 3 பேருந்துகள் விழுப்புரம் தலைமை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளுக்கு வழித்தட அனுமதி கிடைத்தவுடன், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

விழுப்புரம் மக்களே உஷாரா இருங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 35 நபர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இதில் 42 லட்சத்து 50,755 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்த <>இணையதளம் <<>> மூலமாகவோ 24 மணி நேரத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் சைபர் காவல்துறையினர் தெரிவித்துள்னர்.ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

News August 15, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அவகாசம் நீட்டிப்பு

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 2ம் ஆண்டு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான இணையதளம் முன்பதிவு கால அவகாசம் வருகின்ற ஆக.20ம் தேதி இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.cmtrophy.sdat.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News August 14, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் (8667300648), ரோஷணை காவல் ஆய்வாளர் தரணேஷ்வரி (9486217485), சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு (9498189254), வானூர் காவல் ஆய்வாளர் சத்யா (9498151477), மற்றும் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் (9498189397) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

image

விழுப்புரம் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

image

விழுப்புரம் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(ஆக.15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கூடங்கள் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

News August 14, 2025

டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(ஆக.15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கூடங்கள் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!