India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் வரலாறு. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது, தோஷம் நீங்க இத்தலத்துள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை.மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் அருகேயுள்ள திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயில் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்டது மற்றும் பழமை வாய்ந்தது . இந்த கோயிலில் ஐந்து திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிற நம்பிக்கை உண்டு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.
திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கல்குவாரி உரிமையாளர் உள்பட குற்றவாளிகள் 4 பேருக்கு நேற்று 23.04.2025 ஆயுள் தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்து விழுப்புரம் SC/ST சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், இரும்பையில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 7ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஷேர் பண்ணுங்க
▶️ மரக்காணம் கடற்கரை,
▶️ திருவக்கரை புவியியல் பூங்கா,
▶️ஆரோவில்,
▶️ மேல்சித்தாமூர் குடவறை கோவில்,
▶️மண்டகப்பட்டு குகை கோயில்,
▶️ சட்-அட்-உல்லா கான் மசூதி,
▶️ செஞ்சி மதிற்சுவர்,
▶️ செஞ்சி கோட்டை.
உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து இங்கெல்லாம் போக பிளான் போடுங்க
விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ <
விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள்(ஏப்.23) <
திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கூட்ரோட்டில், நான்கு பக்கங்களிலிருந்து வாகனங்கள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகமாகி உள்ளது. பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். திண்டிவனம் டவுன் போலீசார் சார்பில் முதல் கட்டமாக வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் பேரி கார்டு வைக்கப்பட்டது.நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கவிதா போக்குவரத்து போலீசாருடன் ஆய்வுசெய்தார்.
விழுப்புரம் கோலியனூரில் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.