India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டிவனம் – மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோ, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரில் இளங்கோவை ஆரோவில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செஞ்சி வட்டம் சந்தியங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 2016ஆம் ஆண்டு விவசாயிகளை ஏமாற்றி கூட்டுறவு அதிகாரிகள் ரூ.4.12 கோடியை சுருட்டி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்கவும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் நவ.20ஆம் தேதி வயிற்றில் கருப்பு துணிகட்டி காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் மற்றும் சர்வீஸ் பவுண்டேஷன் இணைந்து 90வது இலவச கண்சிகிச்சை முகாமை நடத்துகிறது. இந்த முகாம் நாளை (09.11.2025) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேசிய நெடுஞ்சாலை, கோயிலூரில் நடைபெறும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமில் கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.

திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு தெரியாமல் ஆண் நண்பருடன் சென்னைக்கு சென்ற மாணவி, கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பி உள்ளார். அப்போது காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி பாழடைந்த வீட்டிற்கு சென்று அத்துமீறி உள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் ஷேர் பண்ணுங்க

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (நவ.8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வன்னியர்களுக்கு இடைக்கால தீர்வாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த கோரி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். வருகின்ற (டிச) 12-12-2025 அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எதிரே அற வழியில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிதுள்ளார்.

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<

விழுப்புரம் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ம.ஜெயச்சந்திரன். சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். வங்கி அலுவலர்கள் அடுத்த வாரம் வருமாறு கூறியதால் வீடு திரும்பிய அவர், வாகனத்தில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை(நவ.09) நடைபெற உள்ள தேர்வில் 10,859 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட எஸ்.பி சரவணன், ‘தேர்வாளர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 9:30 மணிக்குமேல் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை. எலக்ட்ரானிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

1) விழுப்புரம் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு <
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.