India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று(ஏப்.13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் வழிகாட்டி 2025 நிகழ்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என குழப்பத்தில் இருப்பார்கள். இதற்கு தீர்வுகாணும் பொருட்டு இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விஜய் இன்போ மீடியா இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று .விழுப்புரம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில் உள்ளது அரசலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இங்குள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகம் செய்தால் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ப்ரோமோஷனுகாக காத்திருக்கும் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் திடீரென பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி அந்த பொறுப்ப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் . திருச்சி சிவா, எம்.பி., அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இனி துணை பொதுசெயலாளராக நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
▶மாவட்ட ஆட்சியர் – 9444138000 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008160 ▶காவல்துறை கண்காணிப்பாளர்- 9498100485 ▶ வட்ட வழங்கல் அலுவலர், விழுப்புரம்- 9445000201 ▶ நகராட்சி ஆணையர், விழுப்புரம் – 04146-222206 ▶வருவாய் கோட்டாட்சியர் அலுவலர், விழுப்புரம் – 9445000424 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொழிலாளி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழந்தார். செஞ்சி வட்டம் காட்டுசித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்விழி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். இதில், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் ஆகியவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.