Villupuram

News August 16, 2025

விநாயகர் சிலைகள் தயாரிக்க, கரைக்க வழிமுறைகள் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலப்பற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். ரசாயன மற்றும் எண்ணெய் வண்ண பூச்சுகளும் தவிர்க்கப்பட வேண்டும். சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

விழுப்புரத்தில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

image

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விழுப்புரத்தில் அமைந்துள்ள சம்புவராயநல்லூர் பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை சுயம்புவாக தோன்றியது என நம்பப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

திருட முயன்ற பைக் திருடனைப் பிடித்த பொதுமக்கள்

image

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இருவர் திருட முயன்றனர். அதிகாலை 5:00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொதுமக்கள் ரூபனை என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். விழுப்புரம் போலீசார் ரூபனைக் கைது செய்ததுடன், தப்பியோடிய சந்தோஷையும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு காரணமாக ஒரு திருடன் பிடிபட்டுள்ளான்.

News August 16, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

விழுப்புரம் சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளர் விருது

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அருகே உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் இன்று (ஆக.15) 79-வது சுதந்திர தின விழாவில் கொண்டாடப்பட்டது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கு சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வழங்க, காவல் கண்காணிப்பாளர் சரவணன், கூடுதல் ஆட்சியர் பத்மஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 15, 2025

தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி திடீர் விசீட்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தொட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி, தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அன்புமணியின் தாயார் சரஸ்வதிக்கு இன்று(ஆக.15) பிறந்தநாள் என்பதால் ஆசிர்வாதம் பெற சென்றதாக தகவல். ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.

News August 15, 2025

விழுப்புரம்: கலைத்துறையில் வளர இங்கு போங்க!!

image

விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் கிராமம் எனும் பகுதியில் அமைந்துள்ள சிவலோகநாதரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இத்தலம் குறித்து தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள அம்பாலை வழிபடுவதன் மூலம் நடனம், இசையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. கலைத்துறையில் ஈடுபாடுள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

விழுப்புரம்: விமானப்படையில் சேர ஆசையா?

image

விழுப்புரம் இளைஞர்களே அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆண்களுக்கு செப்.2,3 மற்றும் பெண்களுக்கு செப்.5,6 ஆகிய தேதிகள் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மையத்தில் நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன.2001-ஜூலை 2008க்குள் பிறந்தவர்களாகவும், 10,12th,டிப்ளோமோ முடித்தவர்களாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருந்தால் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். <>மேலும் தகவலுக்கு<<>>

News August 15, 2025

விழுப்புரம் இளைஞருக்கு சமூக சேவை விருது

image

விழுப்புரத்தை சேர்ந்த ‘மனிதம் காப்போம் குழு அறக்கட்டளையின்’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜாக் சந்துருக்கு 2025ம் ஆண்டிற்கான சமூக சேவை விருது வழங்கப்பட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கி கௌரவித்தார். சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மானியத்துடன் புல்நறுக்கும் இயந்திரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2025-2026 நிதியாண்டில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 150 பயனாளிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!