Villupuram

News October 1, 2025

விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17886425>>மேலும் அறிய<<>>

News October 1, 2025

விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

விழுப்புரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

விழுப்புரம்: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

image

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) <>இந்த லிங்க்கில் <<>>சென்று தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 1, 2025

விழுப்புரம்: ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

image

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888,
4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க

News October 1, 2025

விழுப்புரம்: வங்கி, வங்கி ஊழியர் மீது புகார் அளிக்கணுமா?

image

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின்<> இந்த லிங்கின்<<>> மூலம் புகார் செய்யலாம். அல்லது, இதற்கான சென்னை மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து பிராந்திய மற்றும் கிராமப்புற வங்கிகள், தொடக்க நிலைக்கூட்டுறவு வங்கிகள் என அனைத்தின் மீதும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்கள்

News October 1, 2025

விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க!

News October 1, 2025

விழுப்புரம் சரித்திர நாயகனின் பிறந்தநாள்

image

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து நடிகர் திலகமானார். இவருக்கு இன்று 98ஆவது பிறந்தநாள். விழுப்புரம் மண்ணில் பிறந்த இவரை இன்று நினைவு கூறுவோம். இவர் நடித்த படத்தில் உங்களுக்கு பிடித்த படம், வசனம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News October 1, 2025

விழுப்புரம்: +2 போதும்..ரூ.69,000 சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை

image

SSC ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு.. +2 முடித்த அனைவருக்கும் இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 1, 2025

விழுப்புரம்: மனித மிருகத்திற்கு 20 ஆண்டுகள் சிறை

image

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜேந்திரன் என்ற மனித மிருகம் அந்த சிறுமியை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்மான வழக்கில் ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News October 1, 2025

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(அக்.02) டாஸ்மாக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!