India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தான் காரணம். அதன் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்று கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்திவைத்துறை சார்பில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” DRUG FREE IN செயலியின் (Mobile APT) பயன்பாடு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுடனான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 20ம் தேதியில் காலை 11 மணிக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்,திருவெண்ணெய்நல்லுார் கண்டாச்சிபுரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 21ம் தேதி, பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29) சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், நேற்று முன்தினம் மது போதையில் திண்டிவனத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள வாய்க்கால் பாலத்தின் தடுப்புக் கட்டை மீது அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததில் பாலாஜிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தாா். திண்டிவனம் போலீஸாா் விசாரணை நடத்திற் வருகின்றனர்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் கொந்தமூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், 20 சீல் வைக்காத சாராய பாக்கெட்டுகள், அரை லிட்டர் சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அர்ஜுனன் மற்றும் ஆனந்த், வின்சென்ட் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் -தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து, ரயில்வே துறை மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.