India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்தது. சென்னை திருவல்லிக்கேணி சேர்ந்த சம்சுதீன், ரிஷி மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் எலெக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல்,கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் காலியாக உள்ள 610 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. BE(எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல்)/B.Sc(கணினி அறிவியல்) படித்த 28 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <

சென்னையில் இருந்து நேற்று இரவு மூணாறு சுற்றுலா சென்ற கார் விக்கிரவாண்டி அருகே சென்ற போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கார் தீ பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். சுற்றுலா சென்ற கார் எரிந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவிலான, 44வது சப்-ஜூனியர் பூப்பந்து விளையாட்டு போட்டி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில் நடந்தது. அதில், விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி ராஜஸ்ரீ, இரட்டையர் மற்றும் குழு போட்டியில் பங்கேற்று முதலாமிடம் பிடித்து 2 தங்கப்பதக்கங்களை வென்றார். மாணவிக்கு பழக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு காவலர் ஆய்வாளர் ப.நடராஜன், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் மா .சத்யாநந்தன் உட்பட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. வெளியில் போறவங்க இன்னைக்கு மறக்காம குடை எடுத்துட்டு போங்க

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், வானூர், கண்டமங்கலம், மரக்காணம், செஞ்சி, திண்டிவனம், ஒலக்கூர், மேல்மலையனூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே வெளியே செல்லும் போது மறக்காமல் குடை, ரெயின் கோர்ட்டை எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தொடரில் இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைகளை குறித்து குரல் கொடுக்க பசுமை தாயத்தின் சார்பாகவும் ஐநா சபைக்கு குழுவின் தலைவராகவும் இன்று அக்.1 மயிலம் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து உரையாற்றினார்கள்.

▶️ சொத்து தகராறு
▶️ குடும்ப பிரச்சனை
▶️ கடன் பிரச்சனை
▶️ குழந்தைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் . நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்
Sorry, no posts matched your criteria.