India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நகரப் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் செல்லும்போது, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும், சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது குறித்தும், சந்தேக நபா்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் தொடா்ச்சியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என எஸ்.பி. சரவணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<
பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பிப்.8ஆம் தேதி அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், தனிவட்டாட்சியர், வட்டவழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டி மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமையாளர்கள் உரிமை கோரிய வாகனங்கள் தவிர்த்து மீதமுள்ள 19 நான்கு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கரவாகனங்கள், 98 இரண்டு சக்கரவாகனங்கள், ஆகமொத்தம் 119, வாகனங்கள் 12.02.2025 தேதி அன்று காலை 10.00 மணிக்கு பொதுஏலம் நடக்கவிருக்கிறது. *தேவைபடுவோருக்கு பகிரவும்*
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைத்து கொடுத்தமைக்காக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இன்று சந்தித்து, தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதற்கு தனது நன்றியினை இன்று(பிப்.5) பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் குரு விருதாம்பிகை மற்றும் மருமகன் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தெரிவித்துக் கொண்டார்கள்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.02.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்ததாக கூறி மத்திய அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி மாலை விழுப்புரத்தில் திமுக சார்பில் “கண்டன பொதுக்கூட்டம்” நடைபெற உள்ளது. இதற்கான இடத்தை விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கௌதம சிகாமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் முருகவேல், கல்பட்டு ராஜா, பிரபாகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், ஷேக் அப்துல் ரகுமான் இன்று தனது அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.