India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியில் செல்பவர்கள் மழை வாய்ப்பு இருப்பதால் குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வருகின்ற 5/10/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செஞ்சி காந்தி பஜார் சாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மதுவிலக்கு வேட்டையில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 584 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.2) இரவு 10.00 மணி முதல் (அக்.3) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, <

தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியத்துடன் முதல்வரின் உழவர் நல வாரிய சேவை மையம் அமைக்க விண்ணபிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தோட்டக்கலை, வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்குதல் போன்றவை இதன் மூலம் வழங்கப்படும். தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(அக்.03) உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1.மணக்குள விநாயகர் திருமண மண்டபம், திண்டிவனம்
2.நியாய விலைக்கடை வளாகம், கோட்டக்குப்பம்
3.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பில்ராம்பட்டு
4.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வீடூர்
5.மரகதம் கந்தசாமி மஹால், தி.வெ.நல்லூர்
6.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தோகைப்பாடி
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

108-ஐ போல 104 உதவி எண் இருப்பது பற்றி தெரிவதில்லை. மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க தான் 104 சேவை உள்ளது. 104 கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொள்ளும் போது, அவர்களுக்கென தனி பதிவெண் வழங்கப்பட்டு துறை சார்ந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கப்படும். உடல்நலம் மட்டுமின்றி மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் இதில் பெறலாம். கட்டணம் கிடையாது. ஷேர் பண்ணுங்க

விழுப்புரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்தது. சென்னை திருவல்லிக்கேணி சேர்ந்த சம்சுதீன், ரிஷி மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.