India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய(ஆக.17) மழை அளவு
▶️விழுப்புரம் 16 மி.மீ
▶️ கோலியனூர் 15 மி.மீ
▶️ வளவனூர் 17 மி.மீ
▶️ செஞ்சி, கெடார், முண்டியம்பாக்கம், முகையூர் 3 மி.மீ
▶️ திண்டிவனம் 13 மி.மீ
▶️ மரக்காணம் 11 மி.மீ
▶️ அவலூர்பேட்டை 10 மி.மீ
▶️ அரசூர் 2 மி.மீ
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு காலை 9.30 – 12.30 ஓ.எம்.ஆர் சீட் தேர்வும், மதியம் 2.30 – 5.30 மணி வரை மொழிபெயர்ப்பு மற்றும் துல்லியமான எழுத்து தேர்வை 1,546 பேர் எழுதிய நிலையில் 1,481 பேர் ஆப்சண்ட் ஆகினர். இன்று மொழிபெயர்ப்பு விளக்க வகை தேர்வு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது
மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரணை பெரிச்சனூர், கண்டமங்கலம் துணை மின் நிலையம், கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் டேங்கில் நீர் நிரப்புவது, சாதனங்களை சார்ஜ் செய்து கொள்வது உள்ளிட்ட அடிப்படைகளை இன்றே நிவர்த்தி செய்துவிடுங்கள். ஷேர் பண்ணுங்க!
ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கழுத்தை நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடைக்கப்பெற்ற ஆண் பிரேதம் சம்மந்தமாக, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அன்றைய தினமே கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி என்பது தெரிய வந்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்காவல்படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலி பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்பியின் உத்தரவின்படி, கோட்டக்குப்பம் காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள20-45 வயது நல்ல உடல் திறன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விழுப்புரம் ஊர்க்காவல் படையில் விண்ணப்பங்கள் பெற்று ஆயுதப்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆக. 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் வருகின்ற ஆக.22ம் தேதி இரவு 10:30 மணி அளவில் ஆவணி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளதால் பக்தக் கோடிகள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளலாம். அங்காலம்மன் பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
விழுப்புரத்தில் AI படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு செம வாய்ப்பு. வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு 12th, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.