Villupuram

News February 8, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 8, 2025

பேராசிரியர் கல்வி சான்றுகளை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்

image

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு அதே கல்லூரியின் பொருளியல் பேராசிரியர் ஜி.குமார் தொலைபேசி மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததுடன், விருப்பத்திற்கு இணங்கும்படி மிரட்டல் விடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பேராசிரியர் கல்வி சான்றுகளை ரத்து செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News February 8, 2025

நடமாடும் காய்கறி விற்பனை வண்டி வழங்கிய ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், நேமூர் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.02.2025) வழங்கினார். உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், உதவி இயக்குநர் வெங்கடேசன் உட்பட பலர் இருந்தனர்.

News February 8, 2025

செய்முறை தேர்வில் 21,003 பேர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. 195 பள்ளிகளைச் சேர்ந்த 21,003 பேர் இந்தத் தோ்வில் பங்கேற்றுள்ளனா். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர்கள், அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் செய்முறைத் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

News February 8, 2025

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொழில் நுட்ப வல்லுனர் (பெண்) மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிகமானவை. இந்தப் பணியிடங்களில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் வரும் 12-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலகத்தை நேரில் அணுகி, விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News February 8, 2025

விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு இலஞ்ச ஒழிப்புத் துறையின் அறிவிப்பு

image

அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு:-
டி.எஸ்.பி- Tr. அழகேசன் : 94981 57709
இன்ஸ்பெக்டர் செல்வி ஈஸ்வரி: 9842402972
தொலைபேசி: 04146-259216
இதுசம்பந்தமாக புகார்/தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும்.

News February 8, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

 தைப்பூசத்தை முன்னிட்டு  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைக்கும் வருகின்ற 11ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. மீறி  கடையை திறந்து வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 8, 2025

அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்

image

எதிர்வரும் 11.02.2025 (செவ்வாய் கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் (Vadalur Ramalingar Ninaivu Naal) நாளன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் ,( FL1/FL2/FL3/FL3A/FL3AA and FL11) மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் .இ.ஆ.ப.உத்தரவு.

News February 8, 2025

விழுப்புரம்-காட்பாடி ரயில் பகுதியளவு ரத்து

image

வேலூர் காட்பாடி யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விழுப்புரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் (66026) பிப்ரவரி 10,12,14 தேதிகளில் வேலூர் காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே ரயில் வேலூர் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும், இனத்திற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

பைக் மோதியதில் கெளரவ விரிவுரையாளா் மரணம்

image

விழுப்புரம் வட்டம் கருங்காலிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாா் இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் காணையிலிருந்து கருங்காலிப்பட்டு நோக்கி தனது பைக்கில் விஜயகுமாா் சென்று கொண்டிருந்தார் அப்போது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது விஜயகுமாா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

error: Content is protected !!