India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (10.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.02.2025) வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன் உட்பட பலர் உள்ளனர்.
திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவி வேலைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு 2 தனியார் நிறுவன ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் தனியார் நிறுவன ஊழியர்களான பாண்டியராஜன், சந்துரு ஆகியோரை நேற்று போக்சோ சட்டத்தில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜிகுட்டா, ஜே.பி.நகர், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். பெயிண்டரான இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றார். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்தபோது அரிக்கிருஷ்ணன் கடல் அலையில் சிக்கி மாயமானார். இந்த நிலையில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்வரும் 10.02.2025 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேல்மலையனூர் ஒன்றிய திமுக ஏற்பாட்டில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த மகளிர்கள், இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர், ஒன்றிய கழக செயலாளர்கள் நெடுஞ்செழியன், R. விஜயகுமார், நாராயண மூர்த்தி, சாந்தி சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<
கோட்டகுப்பம்:புதுச்சேரி அண்ணா வீதி, சோ்ந்த தினேஷ் இவா்,பிப்7 இரவு புதுச்சேரி-சென்னை கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சம்குப்பம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த பைக்கும், தினேஷ் சென்ற பைக்கும் மோதிக்கொண்டன. இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தினேஷ் உயிரிழந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.