Villupuram

News October 5, 2025

விழுப்புரம்: போலீஸ் மீது புகார் செய்வது எப்படி?

image

விழுப்புரம் மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <>இந்த லிங்க் மூலம்<<>> ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள்.

News October 5, 2025

விழுப்புரம்: BE போதும், லட்சத்தில் சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான SECI-ல் கூடுதல் ஜென்ரல் மேனேஜர், டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர், மேனேஜர், டெபியூட்டி மேனேஜர், சீனியர் மேனேஜர், ஜூனியர் ஃபோர்மேன் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் BE முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.70,000-2,60,000 வரை வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் அக்.24-க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 5, 2025

விழுப்புரம்: 16 போலீசார் பணியிட மாற்றம்-எஸ்.பி அதிரடி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட, மொத்தம் 16 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையம் ஆரோக்கியநாதன் பிரான்சிஸ் சத்தியமங்கலத்திற்கும், கெடார் பொன்னியின்செல்வன் நல்லாண்பிள்ளைபெற்றாளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் பிறப்பித்துள்ளார்.

News October 5, 2025

விழுப்புரம்: தமிழர்களின் வரலாற்று சுரங்கம்!

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ராஜம்புலியூர் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில், செஞ்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர், தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முகில், பச்சையப்பன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, கல் செக்குடன் கூடிய பாறையில் மூன்றாம் நந்திவர்மன் கால கல்வெட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டானது தூளியில் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

News October 5, 2025

போதை மாத்திரைகள் விற்பனை: 3 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளந்திரையன், திண்டிவனத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் சூர்யா ஆகிய மூன்று பேரை திண்டிவனம் போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள், 4 ஊசி, 5 செல்போன், 2 செலைன் வாட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News October 4, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.4) இரவு முதல் காலை (அக்.5) வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

மின்விபத்தை தடுக்க மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுரை

image

மின்கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்க ஆர் சி டி பொருத்த வேண்டும். மின்சாரம் சார்ந்த புகார்களை 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் மின்விபத்தை தடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

News October 4, 2025

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

image

விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் எழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்www.drbvpm இணையதளத்தில் நாளை முதல் வெளியிடப்படும்என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜய சக்தி தெரிவித்துள்ளார் .இந்த தேர்வு அக்டோபர் 11ஆம் தேதி காலை 10 -1 மணி வரை விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடைபெற இருக்கிறது

News October 4, 2025

விழுப்புரம் : வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 4, 2025

விழுப்புரம்: ரயில்வேயில் 8,875 பேருக்கு வேலை!

image

விழுப்புரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், இளநிலை கணக்கு உதவியாளர் கம் தட்டச்சர் & மூத்த எழுத்தர் கம் தட்டச்சர் பதவிக்கு 8,875 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> அக்.14-க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE

error: Content is protected !!