Villupuram

News February 12, 2025

பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அளித்து வருவது திமுக அரசு- எம்பி

image

விழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டத்தில், துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பேசியதாவது: தமிழகத்தின் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அளித்து வருவது திராவிட முன்னேற்றக் கழக அரசு. வருகின்ற தேர்தல் நமது உரிமைகளை பாதுகாக்கின்ற தேர்தல், இதை மக்களிடம் எடுத்து கூறுங்கள் என்றார்.

News February 12, 2025

விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (12.02.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உடன் இருந்தனர்.

News February 12, 2025

திரைப்பட பாணியில் கொள்ளை: 4 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் சென்னை-புதுச்சேரி இசிஆர் சாலையில் ஓடும் சரக்கு லாரியில் ஏறி சமையல் எண்ணெய் பாக்கெட்டு பண்டல்களை திருடிய கும்முடிபூண்டி கோட்டீஸ்வரன் (50), ஸ்ரீவைகுண்டம் சிக்கந்தர் பாதுஷா(30), வியாசர்பாடி பிரகாஷ் (59), நெல்லை தென்பத்து முகமது சுபர்கான் (25) ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்த கோட்டக்குப்பம் போலீசார் அவர்களிடம் இருந்த மினி கண்டெய்னர் லாரி, 69,000 பணம் ஆகியன பறிமுதல் செய்தனர்.

News February 12, 2025

டிப்ளமோ முடித்தவர்களுக்கு HP நிறுவனத்தில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் தந்தை மகன் பலி

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை அருகே ஏழுமலை என்பவர் தன்னுடைய மகன் தயாநிதி என்பவரை சென்னைக்கு பேருந்து ஏற்றிவிட இருசக்கர வாகனத்தில் வந்தபோது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் தந்தை ,மகன் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து  விக்கிரவாண்டி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

News February 12, 2025

பைக் மீது பயணிகள் வேன் மோதல் இருவா் உயிரிழப்பு

image

திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்ஷனா கோனூார் மேட்டுத் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவா்கள் நேற்று இருவரும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராட்டிக்குப்பம் அருகே சாலை எதிர் திசையில் பைக்கில் சென்றுள்ளனர். இவா்களது மீது வேன்  மோதியது விபத்தில் திருநங்கை ரக்ஷனா மற்றும் முருகன் ஆகியோா்  காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

News February 11, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (11.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 11, 2025

 தைப்பூசத் திருநாளையொட்டி சிறப்பு ரயில்கள் 

image

தைப்பூசத் திருநாளையொட்டி வடலூரில் நடைபெறும் விழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் மற்றும் விருத்தாச்சலத்திற்கு, கடலூருக்கு இன்று முதல் பிப்.13 தேதி வரை  சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் அறிவிப்பு.

News February 11, 2025

செஞ்சி அருகே லாரி மோதி பள்ளி மாணவி பலி

image

செஞ்சி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி அனந்தபுரம் அரசு  பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடித்து விட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது செஞ்சிக்கு சென்ற லாரி கனிமொழி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கனிமொழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2025

மயிலம் அருகே விபத்தில் மூதாட்டி பலி 

image

திண்டிவனம், எடப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்தவர் மூதாட்டி சாவித்திரி. இவர் நேற்று (பிப் 9) மயிலம்-கூட்டேரிப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாவித்திரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் நேற்று  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!