India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுத 2ஆவது ஆண்டாக பயிற்சிமேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் எஸ்.எஸ்.ஐ., ரவிக்குமார் நெடுஞ்சாலை ரோந்து எண்.6க்கும், விழுப்புரம் தாலுகா வெங்கடேசன் நெடுஞ்சாலை ரோந்து எண்.3க்கும், விழுப்புரம் டவுன் ஷாஜகான் ரோந்து எண்.2க்கும், வளவனுார் அய்யனாரப்பன் கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடிக்கும், விழுப்புரம் மேற்கு பார்த்திபன் கிளியனுார் சோதனைச் சாவடிக்கு என, 80 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ் பி சரவணன் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நகராட்சி திடலில் இன்று (மார்ச் 2 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை) புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இதனை வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை 10:30 மணியளவில் துவக்கி வைக்க உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.03 2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில், அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களில் உதவியுடன் கவரை, சிட்டாம்பூண்டி, பாலப்பட்டு, அணையேறி, மாத்தூர் மற்றும் வரிக்கல் ஆகிய ஆறு கிராமங்களில் 40 சிசிடிவி கேமராக்களை பொருத்தி அதனை கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் மருதப்பனை இன்று விழுப்புரம் எஸ்பி சரவணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தொழில் போட்டியில் முதியவரை அடித்துக் கொன்ற முருகன் மனோகா் லட்சுமி வழக்கில் உணவகத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம் நிரூபணமானதால், மனோகருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ. பாக்கியஜோதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து மார்ச் 3ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. வீடூர் அணை நீர் திறப்பு மூலம் 3,200 ஏக்கர் பாசனப்பரப்புகள் பாசனவசதி பெறும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.