India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.6) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று அக்.6 மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டத்துக்கு கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை கோருதல், பட்டா வழங்கக் கோருதல், பட்டா பெயா் மாற்றம், கல்விக் கடன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

வெளிநாடுகளில் சென்று படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதை பெற www.bcmbcmw.tn.gov.in/welfschemes-minorities.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், சேப்பாக்கம் சென்னை -5 என்ற முகவரிக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஹேக் அப்துல்லா ரஸ்மான் அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சென்று படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதை பெற www.bcmbcmw.tn.gov.in/welfschemes-minorities.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், சேப்பாக்கம் சென்னை -5 என்ற முகவரிக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஹேக் அப்துல் ரஸ்மான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களே, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்!

தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .

நடிகர் விஜய் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, விழுப்புரம் நகரில் விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், ‘தளபதியை காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என சொல்லிட்டு போங்க.

விழுப்புரம் மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். விழுப்புரம் மக்களே யாருக்காவது பயன்படும். எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே மானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபிகா (25) டெலிகிராம் ஆப் மூலம் அறிமுகமான நபர் ஹோட்டல் புகைப்படங்களுக்கு ரிவ்யூ கொடுத்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அவர் ஆசை வார்த்தைகளை கூறி, ₹11,60,103 பணத்தை பல தவணைகளில் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.