India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் புது காலனியில் இன்று (ஏப்ரல் 2) விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் பணிகளை பார்வையிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மலைச்சாமி. உடன் நில உரிமை மீட்க செயலாளர் ஆனந்தராஜ் மயிலம் தொகுதி பொருளாளர் தீயவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அடுத்த பாதிரி ஏரிக்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதாக நேற்று (ஏப்.1) ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியாகும். இதற்கிடையில் 19ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு நாள் அது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பிறந்தநாள் என்றும், வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி அனில் அம்பானியின் பிறந்தநாள் என்றும் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்றத் தொகுதி வீடூர் கிராமத்தில் வேட்பாளர் அ.கணேஷ் குமாருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இதில் பா. ம. க நிர்வாகிகள்,பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள கொளத்தூர் ஊராட்சி , பெரியசெவலை பகுதிகளில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காந்தலவாடி ஜெ. பாக்யராஜுக்கு ஆதரவாக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் (தெற்கு) ராமலிங்கம் தலைமையில் இன்று வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

தமிழகத்தில் உள்ள தென்னமாதேவி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து விவசாயி 55. இவர்,நேற்று பெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடிக்குளத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் பகுதியில் இருந்த கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், முத்துவை முந்தி சென்றபோது, முத்து தடுமாறி டிரைலரின் பின் சக்கரத்தில் சிக்கினார்.இதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஜானகிபுரம் ரயில்வே கேட் திறக்க கோரி அப்பகுதி பெண்கள் இன்று(மார்ச் 31) ஒப்பாரி போராட்டம் நடத்தினர். ஜானகிபுரம் ரயில்வே கேட் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதை பராமரிப்புக்காக மூடப்பட்டது. அப்பகுதி பொதுமக்களின் பிரதான சாலையாக ரயில்வே கேட் இருப்பதால் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளா் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை நேற்று (மார்ச் 30) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக, அதிமுக, பாமக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 17 பேர் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பழனி தெரிவித்தார்.

செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (55), விவசாயி. நேற்று நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடி குப்பத்திற்கு சைக்கிளில் (மார்ச்.30) சென்று கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் நிலை தடுமாறி டிராக்டர் டிரைலர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது
குறித்து நல்லான் பிள்ளைபெற்றாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.