Villupuram

News April 13, 2024

பானையுடன் வாக்கு சேகரிக்கும் ஒன்றிய சேர்மன்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இன்று (ஏப்.13) காலை பானை சின்னத்திற்கு மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் வாக்கு சேகரித்தார். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்காக மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் கீழ்புத்துபட்டு கிராமத்தில் இன்று காலை வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இளைஞர் ஒருவர் தலையில் பானையை சுமந்தபடி சுற்றி வருவது வேடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

News April 13, 2024

விழுப்புரம் அருகே இளம் பெண் மாயம்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் அருகே கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவரது மகள் சகிலா (22). இவர் கடந்த 4 நாள்களாக காணவில்லை என அவரது தந்தை ராமலிங்கம் நேற்று (ஏப்ரல் 12) புகார் அளித்துள்ளார். 4 நாள்களுக்கு முன்பு கடை வீதிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் ராமலிங்கம் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News April 12, 2024

டீ போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் , விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் இன்று (ஏப்ரல் 12) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கிருந்த டீ கடைக்கு சென்று டீ போட்டு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News April 12, 2024

ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News April 12, 2024

மத்திய ரிசர்வ் போலீஸ் படை கொடி அணிவிப்பு

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து தொகுதிகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதை முன்னிட்டு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.தேவனூர் ஊராட்சியில் அழகன் நல்லூர் காவல் நிலைய உதவியாளர் லியோ சார்லஸ் தலைமையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

News April 12, 2024

விசிக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, திமுக மாவட்ட அலுவலகத்தில், விழுப்புரம் தொகுதி உள்ள விசிக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

News April 11, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை போலீசார் வாக்குபதிவு

image

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள் தங்களது வாக்கினை நாளை 12ம் தேதியும் 14ம் தேதியும் திண்டிவனம், வானூர், விழுப்புரம். விக்கிரவாண்டி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டையும்
ஆரணி தொகுதிக்கு மைலம் மற்றும் செஞ்சி ஆகிய இடங்களில் தங்களது தபால் வாக்கை செலுத்தலாம் என கலெக்டர் பழனி கூறியுள்ளார்.

News April 11, 2024

லட்சத்தீபம் திருவிழா- தயாராகும் ஆஞ்சநேயர் கோயில்

image

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு லட்சத்தீபம் ரத்தானதையடுத்து, இந்த ஆண்டு மிக விமர்சையாக லட்சதீப திருவிழா வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. லட்சதீப விழாவையொட்டி,தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணிகள் இன்று நடந்தது.

News April 11, 2024

நரிக்குறவர் பெண்ணுக்கு கலெக்டர் கிரீடம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் ஆசாக்குளம் நரிக்குறவர்கள் வசிக்கும் இருப்பிடத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நரிக்குறவர் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் கலெக்டருமான பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உட்பட கலந்து கொண்டனர்.

News April 11, 2024

விழுப்புரத்தில் லாரி மீது பாய்ந்து வாலிபர் தற்கொலை

image

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இன்று அதிகாலை சாலையோரத்தில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அந்த வழியாக வந்த லாரி மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

error: Content is protected !!