Villupuram

News April 26, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 25, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 25, 2024

ரயில் சேவை நீட்டிப்பு

image

விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அதன்படி விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் மே 2 முதல் திருவாரூர் வரை இயக்கப்பட உள்ளன. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 25, 2024

தனியார் பள்ளி  வாகனங்களில் ஆய்வு 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 25, 2024

விழுப்புரம்: சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற ரவுடி

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ். இவர் நேற்று(ஏப்.24) ரோந்து சென்றபோது கோட்டைமேடு பகுதியில் இருந்து குயிலாப்பாளையம் செல்லும் பாதையில் நின்று கொண்டிருந்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த ரவுடி மணவாளனை விசாரித்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்‌.ஐ. ரமேஷை, மணவாளன் வெட்ட முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

image

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி விழுப்புரம் அண்ணாமலை பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றாமல் அரசு பேருந்து சென்றது குறித்து ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியானது. இதையடுத்து, பெண் பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தும், ஒப்பந்த ஊழியரான நத்துனர் தேவராசு அவர்களை பணி நீக்கம் செய்து விழுப்புரம் மண்டல பொது மேளாலர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 25, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 25, 2024

விழுப்புரம்: கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2005ம் ஆண்டு நிலத்தகராறில், குலசேகரன், காத்தவராயம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 6 பேர் வழக்கு நடந்த காலங்களில் மரணமடைந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News April 24, 2024

விழுப்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

image

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 24) துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாச்சாவடிமேடு, தோகை பாடி, கப்பூர், தெளி, ஒருகோடி, நெற்குணம், கோவிந்தாபுரம், கண்டம்பாக்கம், மரகதபுரம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

விழுப்புரம்: 91 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

image

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலா, எள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஏப்ரல் 22) கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 91 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விலைபோனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!