India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அலுவலகத்தில், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழாவினை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவல்துறையினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (26.02.2025) நடைபெற்றது. உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் இருந்தார்.
விழுப்புரம் கருங்காலிப்பட்டு சேர்ந்த அஜித் (26),தொழிலாளி இவா், பிப்24 இரவு புதுச்சேரி – திருக்கனூர் சாலையில் கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட நெற்குணம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.பைக் மீது அந்தப் பகுதியில் வந்த டிப்பர் லாரி மோதியதில் அஜித் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தாம்பரம் – விழுப்புரத்துக்கு பிப்.,28-ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் முண்டியம்பாக்கம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் 15 மற்றும் 25 ஆண்டுகள் பணியின் போது தண்டனை இல்லாமல் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA PADAK / UTKRISHT SEVA PADAK இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், நேரில் அழைத்து பதக்கங்கள் அணிவித்தார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி (Rtd), (AUSP) பதக்கம் பெற்றார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக மார்ச் 15ஆம் தேதி வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முகாமைச் சேர்ந்த இந்திரன் (24) என்பவருக்கு திருமணமாகி 1 பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த பிப்., 23ஆம் தேதி முகாமை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் இந்திரனை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தாம்பரம் – விழுப்புரத்துக்கு பிப்.,28-ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் முண்டியம்பாக்கம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் 22 இடங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் சார்பிலும், திருவெண்ணெய்நல்லூரில் தொழில்முனைவோா் ஒருவா் சாா்பிலும் என 23 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், கல்வி உதவித் தொகை முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 633 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பிப்ரவரி 24 பொது மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் கல்வி உதவித் தொகை முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 633 மனுக்களை அளித்தனர் மனுக்களை பெற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.