India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்றத் தொகுதி இரும்புலி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.கணேஷ் குமார் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் வாக்கு சேகரித்தார். இதில் அப்பகுதி மக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பா.ம.க வேட்பாளரை வரவேற்றனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர்
ஜெ. பாக்யராஜ்-க்கு விழுப்புரம் நகரம் 41வது வார்டு கழக செயலாளர் M.R. கிருஷ்ணன் தலைமையில் இன்று
( ஏப்ரல் 4 ) வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் நேற்று (ஏப்.3) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிறு தொழில் செய்ய முடியவில்லை. எல்லாம் கார்ப்பரேட் மயமாகிவிட்டன. அவர்கள் செய்த தேச துரோகங்களில் தேர்தல் நிதி பத்திர மோசடியும் ஒன்று என பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(36). மருத்துவரான இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 1ஆம் தேதி ஜிம்முக்கு செல்வதற்காக ஈசிஆர் சாலையில் நடந்து சென்ற இவரிடம் பணத்தைப் பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் நசீர்பாஷா, சாம்பசிவம், கீர்த்தி வாசன் ஆகிய மூன்று பேரை கோட்டக்குப்பம் போலீசார் இன்று கைது செய்தனர்.
விழுப்புரம் பகுதிகளில் திமுக கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு இன்று (ஏப்ரல் 3) காலை நடைப் பயிற்சியின்போது மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் பானை சின்னத்திற்கு பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 2) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட துணை செயலாளர், கழக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் கே.பி.கலையரசன் கலந்துகொண்டுள்ளார். இதில் மற்ற கட்சி சார்பிலும் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் புது காலனியில் இன்று (ஏப்ரல் 2) விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் பணிகளை பார்வையிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மலைச்சாமி. உடன் நில உரிமை மீட்க செயலாளர் ஆனந்தராஜ் மயிலம் தொகுதி பொருளாளர் தீயவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அடுத்த பாதிரி ஏரிக்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதாக நேற்று (ஏப்.1) ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியாகும். இதற்கிடையில் 19ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு நாள் அது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பிறந்தநாள் என்றும், வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி அனில் அம்பானியின் பிறந்தநாள் என்றும் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.