India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
விழுப்புரம் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். நிலக்கடலை மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30-க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.623.75 பிரீமியம் செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.31,187.37 கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். SHARE
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயனூர்
▶️ சோலை வாழியம்மன் கோயில், கூடுவாம்பூண்டி
▶️ ஜெயபாரதி மண்டபம், கொத்தனூர்
▶️ வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கோலியனூர்
▶️ வேதா உயர்நிலைப் பள்ளி, கோட்டக்குப்பம்
▶️ குஷால் சந்த் பள்ளி வளாகம், திண்டிவனம்
பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். SHARE
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவருமான ரா.ஜனகராஜ் அவரது தந்தை தா.ராஜாமணி (94) நேற்று(ஆக.28) இரவு வயது மூப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
திண்டிவனம் வட்டம் பிரம்மதேசம் பகுதியில் இன்று(ஆக.29) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையின் மருந்தகம் மற்றும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் மரு.ப.லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம், வருகிற 31-ந்தேதி நடைபெறும்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை மேம்படுத்தும் பணிகள் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் உள்ள பூங்கா சீரமைக்கப்பட்டதுடன், அரசுப் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு தினமும் தேநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் முகாம் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் 15 வண்ணங்களில் 1,200 காகிதப் பூச்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயனூர்
▶️ சோலை வாழியம்மன் கோயில், கூடுவாம்பூண்டி
▶️ ஜெயபாரதி மண்டபம், கொத்தனூர்
▶️ வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கோலியனூர்
▶️ வேதா உயர்நிலைப் பள்ளி, கோட்டக்குப்பம்
▶️ குஷால் சந்த் பள்ளி வளாகம், திண்டிவனம்
பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.