India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில்,பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு,வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.உரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், இராம்பாக்கம் 2.மாரியம்மன் திருமண மண்டபம், திருவம்பட்டு 3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பரங்கினி 4.SPG திருமண மண்டபம், பட்டணம் 5.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், தோகைப்பாடி 6.ஆறுமுகம் திருமண மண்டபம், மடப்பட்டு
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று அக்.13 மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டத்துக்கு ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை கோருதல், பட்டா வழங்கக் கோருதல், பட்டா பெயா் மாற்றம், கல்விக் கடன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

விழுப்புரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று (அக்.12) எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அணையிலிருந்து தற்பொழுது 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால், நாளை(அக்.13) அதிகளவு நீர் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ கடக்கவோ கூடாது என எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மாக்குளம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், செஞ்சியை சேர்ந்த அன்பரசன் ஆகிய இருவரை போலீசார் கைது நேற்று (அக்.12) செய்தனர். இவர்களிடமிருந்து 17 போதை மாத்திரைகள், போதை ஊசி மற்றும் இருசக்கர வாகனம் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், முகவரி என அனைத்தும் சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். இந்த <
Sorry, no posts matched your criteria.