Villupuram

News April 7, 2024

எம்எல்ஏ உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, கலைஞர் அறிவாலயத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான நா. புகழேந்தி மறைவை தொடர்ந்து நேற்று அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.

News April 6, 2024

படிப்படியாக உயர்ந்து வந்த புகழேந்தி

image

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) உடல்நிலை குறைவால் காலமானார். 1955ஆம் ஆண்டு பிறந்த புகழேந்தி அத்தியூர் திருவாதித்தினை கிராமத்தைச் சேர்ந்தவர். உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை கற்றுள்ளார். திமுக கிளைக் கழகச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றிய சேர்மன் ஆகவும் பின்னர் ஒன்றிய செயலாளராகவும் படிப்படியாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

விழுப்புரம்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, விழுப்புரம் தொகுதியில் 76 – 14, ஆரணி தொகுதியில் 108 – 3 ஆகியவை பதற்றமான – மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

BIG BREAKING விழுப்புரம்: எம்எல்ஏ காலமானார்!

image

விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி இன்று (ஏப்.6) காலமானார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர் நேற்று விக்கிரவாண்டியில் ஸ்டாலின் வருகையையொட்டி ஏற்பாடுகளை கண்காணிக்க வந்த நிலையில் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி சற்றுமுன் இறந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

News April 6, 2024

விழுப்புரம்: எம்எல்ஏ கவலைக்கிடம்

image

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து மருத்துவக்குழு முண்டியம்பாக்கம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் இன்றைய தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். பொன்முடி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News April 6, 2024

கிர்ணி பழங்களுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) இரவு சேலம் நோக்கிச் சென்ற மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. திண்டிவனம் பகுதியில் இருந்து சேலத்திற்கு கிர்ணி பழங்களை ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநர் சதீஷ் (31) கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சிறிது நேரம் அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

News April 6, 2024

விழுப்புரம்: வாக்கு சேகரித்த அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதி, ஒலக்கூர் ஒன்றியம், வடம்பூண்டி ஊராட்சியில் திமுக கூட்டணி சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு நேற்று (ஏப்ரல் 5) தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரித்தார். உடன் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News April 5, 2024

அரசு பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து

image

இன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து 28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது விழுப்புரம் புறவழிச்சாலையில் ஏற முற்பட்டது.அவ்வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு பேருந்தின் மீது மோதியது,இதில் அரசு பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.இதில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

விழுப்புரம்: 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாள்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதலாக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (ஏப்.4) தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!