India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு நெ.62/56A, விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என்றும், 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(அக்.15) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.வாழியம்மன் திருமண மண்டபம், கப்பளாம்பாடி 2.அம்மன் டவர், ஜானகிபுரம் 3.சமுதாய கூடம், பொம்மையார்பாளையம் 4.கிராம சேவை மைய கட்டிடம், நாயனூர் 5.பாலமுருகன் மஹால், விழுப்புரம் 6.புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மரக்காணம் சாலை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்ட 5 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.

விழுப்புரம் மாவட்ட மழை அளவு நிலவரம் (14.10.25 )அளவு மில்லி மீட்டரில்; செம்மேடு 105 மி.மீ, விழுப்புரம் 56 மி.மீ, அவலூர்பேட்டை 47 மி.மீ, வானூர் 39 மி.மீ,
கோலியனூர் 27 மி.மீ, வளத்தி 26 மி.மீ, வளவனூர் 25 மி.மீ, மானம்பூண்டி 23 மி.மீ,
திருவெண்ணெய்நல்லூர் 22 மி.மீ, ஆனந்தபுரம் 15.6 மி.மீ,
செஞ்சி 12 மி.மீ, முகையூர் 10 மி.மீ, அரசூர் 8 மி.மீ, கெடார் 3 மி.மீ, முண்டியம்பாக்கம் 3 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

விழுப்புரத்தில் காவல்துறை சார்பில், 200 இடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை சாலை, மாம்பழப்பட்டு சாலை பகுதிகளில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொறுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.