India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனுார் பஸ் நிறுத்தத்தில், கோவில் விழாவிற்காக, பா.ம.க., வினர் பேனர் வைத்துள்ளனர். இது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாக கோலியனுார் வி.ஏ.ஓ., ரமேஷ் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஞானவேல், சக்திவேல், கணபதி, அஜய் ஆகிய 4 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லூர் கஸ்தூரிபாய் காந்தி வித்யாலயா பள்ளியில் நேற்று காலை 8:00 மணிக்கு பள்ளியில் வழங்கிய உணவை மாணவிகள் சாப்பிட்டு வகுப்பறைக்கு சென்றனர். பின்னர், 6, 8, 9ஆம் வகுப்புகளை சேர்ந்த மாணவியர் 14 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் மாணவியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இன்று தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சக குழு உறுப்பினர்களுடன் ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் மாஸ்தான், மாவட்ட ஆட்சியர், விக்கிரவண்டி எம்எல்ஏ, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களிடம் அதிகாரிகள் அதிக கட்டணம் பெறுவதாக வந்த தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சார் பதிவாளர் சூர்யா, சுரேஷ், கலையரசி, பரந்தாமன், மாதவன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிற்கு 11 கூடுதல் வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். <
கண்டரக்கோட்டையைச் சேர்ந்த 22 பேர் நேற்று (மார்ச்.4) மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் பங்கேற்பதற்காக வேனில் சென்றனர். லட்சுமிபுரம் சென்று செஞ்சி சாலையை கடக்க முயன்றபோது, தனியார் கல்லுாரி அருகே செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய, மாநில போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவது தெரியவந்துள்ளது. அதற்காக, 2.38 கோடி ரூபாயில் சிறப்பு புலனாய்வு பிரிவின் 3 யூனிட்டுகளை தொடங்குவதற்கான பணியில், போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க, கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., ஏ.டி.எஸ்., உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.