India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் சப் டிவிஷனில் 465, திண்டிவனத்தில் 302, செஞ்சியில் 450, கோட்டக்குப்பத்தில் 208, விக்கிரவாண்டியில் 311 என மொத்தம் 1,736 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில், 1300 சிலைகள் கரைக்கப்பட்டது. 3 நாட்கள் வழிபாடு செய்த இந்த சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், 30% மானியத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தின் அறிக்கை அறிவிக்கப்பட்டள்ளது. இதில், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30% மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்பிக்கவும்.
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் செப்., மாதத்திற்கான கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 2 தேதி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம்; 9ம் தேதி கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம்; 16ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகம்; 23ம் தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகம்; 25ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் கூட்டம் நடைபெறுகிறது
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் . நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும்,பயிர் காப்பீடு தொகை விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும்,நந்தன் கால்வாய் திட்டம் இதுவரை முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. என பல்வேறு கோரிக்கைகள் வலியுத்தினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று(ஆக.29) நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- வருவாய்த்துறை செயல்பாடுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களில் சிலர் இறந்துவிட்டனர். தாசில்தாரில் இருந்து எந்தவொரு அதிகாரிகளும் ஒழுங்காக பணி செய்வதில்லை என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
விழுப்புரம் ஜானகிபுரம் பனந்தோப்பு பகுதியில் கூலிப்படையால் கடந்த 20ஆம் தேதி கொலை செய்யப்பட்ட கருவேப்பிலைபாளையம் பகுதியைச் சேர்ந்த துளசி என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி கொலைசெய்யப்பட்ட துளசி மனைவி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்தனர்.
தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம், அதன் விவசாய வளத்திற்கும், வரலாற்றுச் சிறப்புக்கும் பெயர் பெற்றது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் இம்மாவட்டம், விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளது. இங்குள்ள கிழக்கின் ட்ராய் என அழைக்கப்படும் செஞ்சிக் கோட்டை, பார்வையாளர்களின் மனதைக் கவரும். பலவற்றையும் ஒருசேரக் கொண்டுள்ள இம்மாவட்டம், நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.
விழுப்புரம் மக்களே! இனி வீட்டில் இருந்தபடியே தங்கள் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளைச் செய்யலாம். லைசென்ஸ் விண்ணப்பிப்பது, முகவரியைத் திருத்துவது, அலைபேசி எண்ணைச் சேர்ப்பது உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனில் பெறலாம். டூப்ளிகேட் லைசென்ஸ் பெறுவது, லைசென்ஸ் டெஸ்ட் எழுதுவது குறித்த தகவல்களும் இந்த <
விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
Sorry, no posts matched your criteria.