Villupuram

News March 23, 2024

திருவெண்ணெய்நல்லூர் அருகே தேர் திருவிழா

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஒட்டந்னதல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை ஒட்டி இன்று (மார்ச் 23) பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

News March 23, 2024

விழுப்புரம் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன், இ.பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

விழுப்புரம்: ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

விழுப்புரம் சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

விழுப்புரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி முதல் இரண்டு நாட்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று (மார்ச் 22) உளுந்தூா்பேட்டை வட்டம், பாண்டூா் புதுகாலனியைச் சோ்ந்த கேசவன் மகன் அரசன் (72) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

News March 23, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் இன்றைக்குப் பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

விழுப்புரம்: மு.அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது, முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட மூன்று அவதூறு வழக்குகள் விழுப்புரம் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 1-இல் தொடுக்கப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டாா்.

News March 22, 2024

தேர்தல்: பாமக வேட்பாளர் அறிவிப்பு

image

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

image

விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 21) வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் நாளைக்கு பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

News March 21, 2024

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது

image

விக்கிரவாண்டி, குண்டலிப்புலியூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து கெடார் போலீசார் நேற்று (மார்ச் 20) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தியமூர்த்தி, கணேஷ், கார்த்திக், பாலு, மணிகண்டன் ஆகிய 5 பேர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

News March 21, 2024

விழுப்புரம்: ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

image

வானூர் அடுத்த புளிச்சப்பள்ளம் காலணி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டிற்கு நேற்று (மார்ச் 20) சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 பேர் இரண்டு வாகனங்களில் வந்தனர். பின்னர் செல்வக்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நடராஜர், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!