Villupuram

News March 21, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

image

விழுப்புரம் மாவட்டம் வளவனூா், பாலாஜி நகரை சோ்ந்தவர் அய்யப்பன் (13). வளவனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8-வது படித்து வந்தாா். அய்யப்பனும், இதே பகுதியைச் சோ்ந்த கவின் (12), சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கவின் படுகாயமடைந்தார். புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வளவனூா் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 21, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் 2.34 லட்சம் விவசாயிகள் பயன்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை 2,34,881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து பயனடைந்துள்ளனர். இதில் விழுப்புரம்-27693, திண்டிவனம்-17785, செஞ்சி-47663, அரகண்டநல்லூர்-70571, அவலூர்பேட்டை-37659, விக்கிரவாண்டி-33268, மரக்காணம்-45, வளத்தி-207 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

News March 21, 2025

சிறுமி பாலியல் வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு தண்டனை

image

தி.வெ.நல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 22,000 அபராதம் வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.

News March 20, 2025

இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 20, 2025

வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது – ராமதாஸ்

image

கிளியனூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பட்டாவாக மாற்றம் முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. ஏரி குளம் நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை கூறினார்.

News March 20, 2025

விழுப்புரத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

திமுக பிரமுகர் சடலம் மீட்பு

image

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார்(71) காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக கொலை செய்து, செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் கிராமத்தில் புதைத்ததாக தாம்பரம் போலீசாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், இன்று(மார்ச்.21)செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 20, 2025

திருடு போன ஆட்டோ ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

image

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகர்ஷா தெருவை சேர்ந்தவர் முகமது யாசீர்(32). இவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட  போலீசார், ஒருமணி நேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

News March 20, 2025

விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலத்தால் பரபரப்பு

image

திண்டிவனம் அய்யந்தோப்பு கல்லூரி செல்லும் சாலையோரம் தனியார் ரைஸ்மில் அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ரோசணை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!