India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் செப்.2ம் தேதி கீழ்கண்ட இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
▶️ அரசினர் மேல்நிலைப்பள்ளி மழவந்தாங்கல்
▶️ நூர் மகால் திருமண மண்டபம், எதப்பட்டு
▶️ வள்ளி திருமண மண்டபம், கண்டமங்கலம்
▶️ பாபு JK மஹால், மட்டப்பாறை
▶️ KR திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ மங்களாம்பிகை திருமண மண்டபம், திருவெண்ணெய்நல்லூர்
பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்
விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நாளை மறுநாள்(செப்.1) முதல் சுங்கக்கட்டணம் உயர உள்ளது. ஒரு முறை, பல முறை, மாதக் கட்டண விவரம்:
▶️ கார், ஜீப், பயணிகள் வேன் – ரூ.105, ரூ.160, ரூ.3,170
▶️ இலகு ரக வாகனம் – ரூ.185, ரூ.275, ரூ.5,545
▶️ டிரக், பேருந்து – ரூ.370, ரூ.555, ரூ.11,085
▶️ கன ரக வாகனம் – ரூ.595, ரூ.890, ரூ.17,820
மாதக் கட்டணம்
▶️ பள்ளிப்பேருந்து – ரூ.1000
▶️ உள்ளூர் வாகனம் – ரூ.150
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 1ம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் அறிக்கையாக சமர்ப்பித்து இருந்த நிலையில், இதுகுறித்து அன்புமணி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐ.டி-யில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் மாதம் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. <
இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE, ECE, EEE, BCA, B.Sc(CS), MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பண்ணை அமைப்பதற்கான மொத்த செலவில் பாதி அரசு மானியமாக வழங்கப்படும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு <<17560731>>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற, 625 சதுர அடி நிலம் வேண்டும். இந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல் மற்றும் மின் இணைப்பு அவசியம். குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பண்ணை தள்ளி இருக்க வேண்டும். பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். கோழிப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறால் பண்ணை விவசாயிகள், அமெரிக்காவின் 50% இறக்குமதி வரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் தேக்கமடைந்துள்ளது. இறால் பண்ணைத் தொழிலைக் காக்க, அரசு மாற்று ஏற்றுமதி சந்தைகளை கண்டறிய வேண்டும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயப் பட்டதாரிகளின் திறமையைப் பயன்படுத்தி, உழவர்களுக்கு உதவும் வகையில், 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இம்மையங்கள் அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் சப் டிவிஷனில் 465, திண்டிவனத்தில் 302, செஞ்சியில் 450, கோட்டக்குப்பத்தில் 208, விக்கிரவாண்டியில் 311 என மொத்தம் 1,736 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில், 1300 சிலைகள் கரைக்கப்பட்டது. 3 நாட்கள் வழிபாடு செய்த இந்த சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைத்தனர்.
Sorry, no posts matched your criteria.