Villupuram

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

வயிற்று வலியால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை

image

விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுஜித் பிளஸ் 2 படித்துள்ளார். இவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ( மார்ச் 07 ) நேற்று வயிற்று வலியால் அவதியடைந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2025

திருட்டு வழக்கில் வெளி வந்தவர் போக்ஸோவில் கைது

image

விழுப்புரத்தை சேர்ந்த 15 வயது மாணவி,வந்தவாசி அருகே அரசு பள்ளியில் +1 படிக்கிறார்.கடந்த, 24ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டுச் சென்ற மாணவி,வீடு செல்லவில்லை.புகாரின் அடிப்படையில் உதயசங்கர் (22),மாணவியை காதலித்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இவர் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 8, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

விழுப்புரம் மாணவர் போக்சோவில் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை சித்தேரிப்பட்டைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர் ஒருதலையாக காதலித்தாக கூறப்படுகிறது. மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் பள்ளிக்கு ஆகாஷ் பைக்கில் சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆகாஷை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

News March 7, 2025

விழுப்புரத்தில் 25 பவுன் நகைகள் பறிமுதல்

image

விழுப்புரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் ரோந்துப் பணியில் சிக்கிய பால்சாமி(47), மதன்குமாா்(30) விழுப்புரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்து நகைகளை திருடியவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News March 6, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 6, 2025

குழந்தை வரம் அருளும் வீர ஆஞ்சநேயர்

image

மேல்மலையனூர் வட்டம் பரிதிபுரம் அருகே உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். குழந்தை வரம் அளித்தல், பல வருடங்களாக தடைபட்ட திருமணம், தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க வீர ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

News March 6, 2025

இணையதள வழிய புத்தகம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சி திடலில் இன்று (06.03.2025) நடை பெற்று வரும் ஐந்தாம் நாள் புத்தகத் திருவிழாவில், VGLUG foundation சார்பில், இணைய வழியில் நாட்டுமையாக்கப்பட்ட புத்தகங்கள் தரவிறக்கம் தொடர்பாக அமைக்கப்பட்ட அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரதஹ்மான், அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

error: Content is protected !!