India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றனர். ஆக.1 முதல் 4ஆம் தேதி வரை ஜீனியர், சீனியர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், கோலியனுாரில் உள்ள ‘செய்கோ சாயி கராத்தே’ பயிற்சி மையத்திலிருந்து 11 மாணவர்கள் கலந்து கொண்டனர். சீனியர் பிரிவில் தருண், தேவநாதன் முதலிடமும், கேடட் பிரிவில் யுகேஷ், சசிதரன், விஷ்ணுகுமார் 3ஆம் இடம் பிடித்தனர்.
கோனேரிகுப்பம் கிராமத்தில் இன்று நாவல் பழம் பறிக்க அப்பகுதியிலுள்ள ஓடையை கடந்து செல்ல முயன்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சஞ்சய் மற்றும் மாரிமுத்து என்பவரின் மகள்கள்
பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலக்கூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளனர். இப்புகார் மனுவை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் மனு அளித்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இன்று (ஆகஸ்ட் 7) டெல்லியில் உள்ள கலைஞரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6 ஆவது நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை விக்கிரவண்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று மழை பெய்யுமா?
பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கொய்யாதோப்பு மின்னூட்டியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை பூத்தமேடு, கொய்யாதோப்பு, அய்யன்கோவில்பட்டு, சுப்பன்பேட்டை, திருவாமத்தூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், மேட்டுப்பாளையம், சானாங்தொப்பு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்றைய மழை அளவு விவரம்: விழுப்புரம் 10 மி.மீ., கோலியனூர் 72 மி.., வளவனூர் 65 மி.மீ., திண்டிவனம் 59 மி.மீ., மரக்காணம் 19 மி.மீ., செஞ்சி 83 மி.மீ., வல்லம் 69 மி.மீ., அரசூர் 61 மி.மீ., திருவெண்ணைநல்லூர் 19 மி.மீ. என சராசரியாக 39 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் வரும் 9ஆம் தேதி விழுப்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வரும் 13ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், கொட்டியாம்பூண்டி, சித்தனி, பேரணி, ஆவுடையார்பட்டு, பாப்பனபட்டு, முண்டியம்பாக்கம், சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்ததா?
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை பணியாற்றி வந்த 23 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவிட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் விரைந்து பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.