India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 14ஆம் தேதி முதல் தற்போது வரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை இன்று(ஜூன் 19) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி விடுத்துள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா இன்று(ஜூன் 19) மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் விக்கிரவாண்டி செட்டி ஈஸ்வரன் கோயில் தெருவில் பணிமனை திறக்க உள்ளதால் திமுகவினர் வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனவே அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கிவந்த நியாயவிலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸில் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டடத்தில் நியாயவிலை கடை இயங்கிவருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கக்கனூர் ஊராட்சியில் திமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இன்று (ஜூன் 17) சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் மாவட்ட கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் இருந்தனர்.
கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கி வந்த நியாய விலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸ்-ல் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டிடத்தில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் தென்குச்சிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் கலசம் மீது இன்று காலை 9 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பாலமுருகனை வழிபட்டனர்.
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் திரளாக தொழுகையில் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், பாஜக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆற்ற உள்ள பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஆனது விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.