India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
75.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னிட்டு அய்யூர் அகரம் ஊராட்சியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களான வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வாக்கு செலுத்துவதற்கான 12-D படிவத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று வீடு, வீடாக சென்று நேரில் வழங்கினார். விக்கிரவாண்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தி.மலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், ஆற்காடு, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரத்திற்கு 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என விழுப்புரம் போக்குவரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் இந்தத் இடைத்தேர்தலானது, மும்முனை போட்டியாக தான் இருக்கப்போகிறது. நேற்று திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து விவகாரத்தில், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துக்க நிகழ்வில் பங்கேற்ற 90க்கும் மேற்பட்டோர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம், புதுச்சேரி, விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 37 பேர் உயிரிலாந்த நிலையில், எஞ்சியுள்ளவர்கள் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தில், பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த பிரவீன், சேகர், சுரேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடல்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விக்கிரவாண்டி அடுத்துள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை விநாயகம் என்கிற முன்னாள் ராணுவ வீரர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 21 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்தவரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று விழுப்புரம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வரதராஜன் என்பவர் 2000 கிராம் தங்கத்தை உரிய ஆவணமின்றி எடுத்து வந்துள்ளார். இவரை போலீசார் கைது சுமார் ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் ஆகியோர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பாமக வேட்பாளர் சி.அன்புமணி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதிமுக, தவெக போட்டியிடவில்லை என அறிவித்ததால், மும்முனை போட்டியாக இருப்பதோடு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.