India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம் மற்றும் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக்கூட்டம் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் பங்கேற்று வேட்பாளா் எம்.முத்துக்குமாரை அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் அமைப்பை சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 சுயேட்சைகள் மனு செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக சார்பில் சி.அன்புமணி என்பவர் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று (ஜூன் 14) தமிழக முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் 100% வெற்றி பெற்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. விழாவில் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மண்டலங்களை சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர், நிர்வாகிகள் மற்றும் இதர தொழிற்சங்கங்களுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் பல்வேறு அலுவலர்கள் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இதுவரை ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த அக்னி ஆழ்வார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ரமேஷ், திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று முதல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்கிற வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் டெபாசிட் தொகை செலுத்துவதற்காக பத்து ரூபாய் ஐந்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை கொண்டு வந்திருந்தார். அவற்றை உண்டியல் காசு என்பது போல எண்ணி வருகின்றனர்.
ஜூலை 10இல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கனவே, திமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது. இச்சூழலில் பாமக தேர்தலில் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளராக மருத்துவர் அபிநயாவை அறிவித்துள்ளார். இத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் மாநில அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.