Villupuram

News August 29, 2024

விழுப்புரம் எஸ்.பி, ஆட்சியர் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

image

விழுப்புரம் தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் தனியார் கல்குவாரிகளால் நில அதிர்வு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக அசோக் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எஸ்.பி., தமிழக புவியியல் மற்றும் சுரங்க துறை ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News August 29, 2024

விழுப்புரத்தில் துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல்

image

விழுப்புரம் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ள தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வெகு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் தொழிலாளர்கள் கலைந்தனர்.

News August 29, 2024

கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆக.30, 31) ஆகிய நாட்களில் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 30ஆம் தேதி 125 பேருந்துகளும், 31ஆம் தேதி 165 பேருந்துகளும் என 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News August 29, 2024

காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை

image

பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண், கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சஞ்சீவி, நேற்றிரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 29, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஏ.எஸ்.பி., நியமனம

image

விழுப்புரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக ரவிந்திரகுமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர், புதிய ஏ.எஸ்.பி.,யாக பணி நியமனம் செய்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ஐ.பி.எஸ்., முடித்த சென்னையைச் சேர்ந்த ரவிந்திரகுமார் குப்தா, விழுப்புரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த சுரேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

News August 29, 2024

விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம்

image

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் 31, செப்.2 ஆகிய தேதிகளில் விழுப்புரம் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பகல் 11.15 – 12.15 மணி வரையிலும், மாலை 4.15 – 5.15 மணி வரையிலும் விழுப்புரம்-புதுச்சேரி சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. மற்ற நேரங்களில் வழக்கம்போல இயங்க அனுமதிக்கப்படும்.

News August 29, 2024

விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

image

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 04.09.2024 அன்று மாலை 5.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் ஆட்சியர் அறிவித்த்துள்ளார்.

News August 28, 2024

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 31.08.2024 அன்று ஸ்ரீ ரங்க பூபதி கலை அறிவியல் கல்லூரி, செஞ்சியில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது. தொடர்பு கொள்ள 04146- 223736 என்ற எண்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 28, 2024

தைலாபுரம் தோட்டத்தில் பாமக கலந்தாய்வு கூட்டம்

image

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதியின் 2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றி செயல் திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் சர்வம் ஜெயராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

விழுப்புரம் அருகே நாளை மின் தடை 

image

அரசூர் துணை மின் நிலையத்தில் எதிர்வரும் பருவ மழை முன்னிட்டு பராமரிப்பு பணியால் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அரசூர், ஆனத்துர் , சேமங்கலம், T. குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர்,ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம் , மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு , மேட்டத்தூர் காரப்பட்டு செம்மார் , கிராமம், வி, பி, நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

error: Content is protected !!