India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அடுத்து சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த இவர், ஊரில் உள்ளவர்களிடம் அதிகமாக கடன் வாங்கி செலவளித்துள்ளார். இந்த நிலையில் ஜூலையில் பணிக்கு திரும்ப புறப்பட்ட இவர், பணிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி செல்வி அளித்த புகாரின்பெயரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று 1.கோட்டக்குப்பம் ஊராட்சி-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியக்கோட்டக்குப்பம், 2. காணை-அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தியூர்த்திருக்கை, 3.முகையூர்-KPS திருமண மண்டபம், மணம்பூண்டி, 4.வல்லம்-அரசு நடுநிலைப்பள்ளி, அருகாவூர். 5.மேல்மலையனூர்-அரசிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி 6,கோலியனூர்-அலங்கார திருமண மண்டபம். ஷேர்!
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், பெரியகோட்டக்குப்பம்
▶️ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அத்தியூர்திருக்கை
▶️KPS திருமண மண்டபம், மணம்பூண்டி
▶️அரசு நடுநிலைப்பள்ளி வளாகம், அருகாவூர்
▶️அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், செவலப்புரை
▶️அலங்கார் மண்டபம், கோலியனூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
விழுப்புரத்தில் உள்ள ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன், செஞ்சி மஸ்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (17.09.2025) ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பயிலரங்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா.அருள்மொழி, ராமதாஸ் மூத்த மகள் காந்தி கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் வரும் 20ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு செப். 20 தேதி நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
Sorry, no posts matched your criteria.