India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர், சித்தனாங்கூர், ஆலங்குப்பம், இருவேல்பட்டு, கந்தலவாடி, கருவேப்பிலைபாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசூரில் உள்ள ஏ.எஸ்.கீர்த்தி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூலை 16 அன்று தொடங்கி 13.09.2024 வரை 91 முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து நியமன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் இருந்தனர்.
விழுப்புரத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் ஆகிய பணிகளுக்கு அரசு மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன்படி கூடுதலாக வாசிக்கும் ஸ்டாண்ட், மைக் செட் மற்றும் ஒலிபெருக்கி ஆகிய உபகரணங்கள் தேவாலயத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் கட்ட வரைபடத்தோடு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோட்டில் தனியார் டிஜிட்டல் பிரிண்டிங் கடை திறப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்து கொண்டு இன்று (ஜூலை 28) காலை திறந்து வைத்தார். விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர். பொன். கெளதமசிகாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குழந்தை பிறந்த நாளில் இருந்த 12 மாதங்களுக்குள் பெற்றோர் (அ) காப்பாளர் எழுத்து மூலம் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் வழங்கி கட்டணமின்றி பெயரை பதியலாம். கடந்த 2000ஆம் ஆண்டு ஜன 1ஆம் தேதிக்கு முன் பதிந்த பிறப்புகளுக்கும், இதற்கு பின் பதிந்து, 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளிலும் பெயர் சேர்க்க சேர்க்க வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம்
மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், நேற்று மாலை விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் உள்ள சாராய வழக்குகளின் குற்றவாளிகள் கைது விபரம், சரக்குகள் பறிமுதல் செய்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலுமாக ஒழிப்பதோடு, இதில் ஈடுபடுவோரை தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 25 எம்பிக்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் பாமக பேசியிருக்கும் என்று அன்புமணி கூறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 2026 தேர்தலை பாமக சந்தித்தால், இரண்டு தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியாது என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் எம்பி ரவிக்குமார் இன்று (ஜூலை 27) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு 2023-24 இல் 1490.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1440 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட 50 கோடி ரூபாய் குறைவாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
திண்டிவனம், JVS திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர், முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.மாசிலமணி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.