India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நெல் விவசாயி ஏக்கருக்கு ரூ.690 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு காப்பீட்டு தொகையாக ரூ.34,500 என தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நெல் விவசாயி ஏக்கருக்கு ரூ.690 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு காப்பீட்டு தொகையாக ரூ.34,500 என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையின் தொடர்ச்சியாக இளம் அறிவியல் பி.எஸ்சி., பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 18) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 19) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்போர் உரிய சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கை கட்டணத்துடன் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் மேலாண் இயக்குனராக க.குணசேகரன் இன்று (ஜூலை 17) விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழக அரசு போக்குவத்து கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று அபராதம் செலுத்த சீனிவாசனுக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். சன்றிதழில் தவறாக குறிப்பிடப்பட்ட பிறந்தநாளை மாற்ற வலியுறுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோர், இன்று (ஜூலை 17) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு 1800 4253 1111
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தற்போது தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று முதல் வழக்கமான அலுவலக பணியில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.