India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், தி.மலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்த நிலையில், அதற்கு எதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக ஆகஸ்ட் 2, 165 பேருந்துகள் மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதி 165 என மொத்தம் 330 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அருகே உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை சந்திர மௌலீசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். 2024-25ஆம் ஆண்டிற்கான பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க, பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ.3000 வீதம் அரசு மானியத்துடன் நடப்பாண்டில் விழுப்புரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு ஒருமுறை அப்போலோ மருத்துவமனையில் அவர் வழக்கமாக சிகிச்சை பெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, போன்ற திட்டங்களில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விவரம்: ஆக.2 – B.A, B.Sc, BCA, B.Com படிப்புகள் (மதிப்பெண்கள் 399 – 300), ஆக.5 அன்று B.A வரலாறு, பொருளியல் படிப்புகள் (மதிப்பெண்கள் 299 – 250), ஆக.6 இளநிலை வரலாறு, பொருளியல் படிப்புகள் (மதிப்பெண்கள் 249 – 195), ஆக.7 அன்று B.Sc, BCA படிப்புகள் (மதிப்பெண்கள் 299 – 250), ஆக.8 B.Sc, BCA (மதிப்பெண்கள் 249 – 195) கலந்தாய்வு நடைபெறும்.
திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள அருங்குறிக்கை கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கயிறு அறுந்து விழுந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன் (40), தனிகாசலம் (48), முருகன் (38) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கண்ணன் மற்றும் பொக்லைன் ஓட்டுநர் சின்னப்பன் இருவரை நேற்று (ஜூலை 30) போலீசார் கைது செய்தனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச்செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில், தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று பங்கேற்றார். உடன் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.