Villupuram

News July 19, 2024

விழுப்புரம் அருகே ஆட்சியர் ஆய்வு

image

வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கடங்கப்பட்டு ஊராட்சி, கொண்டலங்குப்பம் கிராமத்தில் பிரதம மந்திரி ஜென்மான் திட்டத்தின்கீழ், இருளர் மக்களுக்கான குடியிருப்பு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உடனிருந்தார்.

News July 19, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

விழுப்புரத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது employmentexchange.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில், ரூ.200 முதல் ரூ.1,000 வரை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் விழுப்புரம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News July 19, 2024

விழுப்புரம் பகுதிகளில் நாளை மின்தடை

image

விழுப்புரத்தில் நாளை வண்டிமேடு, விராட்டிகுப்பம், நன்னாடு, பாப்பான்களம், திருவாமாத்தூர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யாபாக்கம், ஆனங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், ஜானகிபுரம், வழுதரெட்டி, தொடர்ந்தனூர், கோலியனூர், கே.வி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.

News July 18, 2024

மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்பி

image

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் காந்தி உதவி பெறும் அரசு பள்ளியில், இன்று (ஜூலை 18) காலை உணவு திட்டத்தினை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் தொடங்கி வைத்தார். தொடரந்து மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார். உடன் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி உள்ளிட்டோர் இருந்தனர்.

News July 18, 2024

விழுப்புரத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளனர் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

விழுப்புரத்தில் ரவுடி கைது

image

விழுப்புரத்தில், பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் உதவி ஆய்வாளர் காவல் துறையில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ரவுடி அறிவழகனை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News July 18, 2024

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் பெருமிதம்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற மக்கள் முதல்வன் திட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டார். அப்போது, “பல ஆண்டுகளாக மக்கள் மட்டுமே அரசு அதிகாரிகளை தேடி நகரங்களுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பின், அரசு அதிகாரிகள் மக்களைத் தேடி சென்று அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்குகிறார்கள்” என பெருமிதமாக கூறினார்.

News July 18, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் தொடக்கம்

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஊராட்சியில் உள்ள ஊரக பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தொடங்கு வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் சி.பழனி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 18, 2024

மாணவிக்கு உணவு ஊட்டிய எம்எல்ஏ

image

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அருட்கொடி அரசு உதவி பெரும் பள்ளியில், காலை உணவு திட்டம் இன்று (ஜூலை 18) தொடங்கப்பட்டது. இதனை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் தொடங்கி வைத்த அவர், மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கினார்.. பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதில், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!