India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விவரம்: ஆக.2 – B.A, B.Sc, BCA, B.Com படிப்புகள் (மதிப்பெண்கள் 399 – 300), ஆக.5 அன்று B.A வரலாறு, பொருளியல் படிப்புகள் (மதிப்பெண்கள் 299 – 250), ஆக.6 இளநிலை வரலாறு, பொருளியல் படிப்புகள் (மதிப்பெண்கள் 249 – 195), ஆக.7 அன்று B.Sc, BCA படிப்புகள் (மதிப்பெண்கள் 299 – 250), ஆக.8 B.Sc, BCA (மதிப்பெண்கள் 249 – 195) கலந்தாய்வு நடைபெறும்.
திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள அருங்குறிக்கை கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கயிறு அறுந்து விழுந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன் (40), தனிகாசலம் (48), முருகன் (38) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கண்ணன் மற்றும் பொக்லைன் ஓட்டுநர் சின்னப்பன் இருவரை நேற்று (ஜூலை 30) போலீசார் கைது செய்தனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச்செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில், தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று பங்கேற்றார். உடன் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் நல மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டம், குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் குழந்தை நல குழுவின் கூராய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பார்கவி உள்ளார்.
விக்கிரவாண்டி: பொன்னங்குப்பம், வேம்பி, வேளியந்தல், நரசிங்கனூர், கொட்டியாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கஸ்பாகரணை, உலகலாம்பூண்டி, நந்திவாடி ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேம்பி சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே கிணறு வெட்டும் பணியின்போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறிக்கையில், 100 ஆடி ஆழ கிணற்றை அழப்படுத்தும் பணியின்போது கயிறு அறுந்து விழுந்ததில் தணிகாசலம்(48), ஹரி கிருஷ்ணன்(40), முருகன்(38) ஆகியோர் கை, கால் முறிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர், சித்தனாங்கூர், ஆலங்குப்பம், இருவேல்பட்டு, கந்தலவாடி, கருவேப்பிலைபாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசூரில் உள்ள ஏ.எஸ்.கீர்த்தி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூலை 16 அன்று தொடங்கி 13.09.2024 வரை 91 முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.