Villupuram

News August 15, 2024

சென்னையிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள். இதனால் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக ஆகஸ்ட் 16ஆம் தேதி 125 மற்றும் 17ஆம் தேதி 165 என மொத்தம் 290 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.08.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 14, 2024

விழுப்புரத்தில் அமைச்சர்கள் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்து பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மழைநீரில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் கே. என் நேரு, க. பொன்முடி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்த ஆய்வு செய்தனர்.

News August 14, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பொறியியல், தொழில்பயிற்சி, செவிலியா், மருந்தாளுநா் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. மேலும், விவரங்களுக்கு 9499055906, 7010827725 எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

News August 14, 2024

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளைப் பெற விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 14, 2024

விழுப்புரத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்துச்செல்லுங்கள்.

News August 14, 2024

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளைப் பெற விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 14, 2024

விழுப்புரத்தில் மிதமான மழை

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சிறுவந்தாடு, கோலியனூர், முண்டியம்பாக்கம், சாலாமேடு, பிடாகம், கண்டமங்கலம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News August 13, 2024

மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையம், இரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாச வேலை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 13, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!