India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.
விழுப்புரம் செஞ்சி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய தலைமுறை நடத்தும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2024 மாணவர் மேடை நிகழ்ச்சி இன்று மாலை 3:00 மணி அளவில் நடைபெற உள்ளது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.
இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.
விழுப்புரத்தில், சிறிய அளவிலான (250 கோழிகள்) 100 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ, 50% மானியம் வழங்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கட்டுமானச் செலவு. உபகரணங்கள், தீவன செலவு என 50% மானியம் (ரூ. 1,56,875/-) மாநில அரசால் வழங்கப்படும். பயனாளிகள், அரசு கால்நடை மருத்துவமனையை அல்லது கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி., அவர்கள் இன்று (02.08.2024) நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சந்திரசேகர், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் இருந்தனர்.
விழுப்புரத்தில் புதிய பேருந்து சேவையை, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் இன்று (ஆகஸ்ட் 2) வைத்தார். மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கல்லப்பட்டு – வளவனூர் மார்க்கமாக விழுப்புரம் வரை செல்லும் கூடுதல் பேருந்து வழிதடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய குழு பெருந்தலைவர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாக்கம், மேட்டுப்பாளையம், ஆரோபுட் ஆகிய மின்பாதைகளில் இன்று (ஆகஸ்ட் 2) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ஆர்.ஆர்.குளம், மண்டகப்பட்டு, வடுக்குப்பம், வெள்ளாழங்குப்பம், ஆலமரத்துக்குப்பம், பரசுரெட்டிபாளையம், பூவரசங்குப்பம், ஆண்டிப்பாளையம், புளிச்சம்பள்ளம், காட்ராம்பாக்கம் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கண்டமங்கலம், வளவனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 3) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நவமால்மருதுார், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ஆர்.ஆர்.குளம், பாக்கம் கூட்ரோடு, மண்டகப்பட்டு, வடுக்குப்பம், மேட்டுப்பாளையம், ஆண்டிப்பாளையம், செங்காடு, இளங்காடு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், நரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பசுமைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.