India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் வீட்டில் பணம் வைத்து சூது விளையாடிய ரஞ்சித், நாவம்மாள், மகேஷ், வடிவேல் திருநங்கை சம்பா உள்ளிட்ட 9 பேரை தாலுகா போலீசார் இன்று அதிகாலை கைது செய்து, 60 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டது. விழுப்புரம் 20 மில்லி மீட்டர், கோலியனூர் 42 மில்லி மீட்டர், வளவனூர் 51 மில்லி மீட்டர், திண்டிவனம் 79 மில்லி மீட்டர், மரக்காணம் 25 மில்லி மீட்டர், செஞ்சி 73 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 5 மில்லி மீட்டர், அரசூர் 50 மில்லி மீட்டர், முகையூர் 22 மில்லி மீட்டர், வல்லம் 102.40 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
தமிழத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.விவக்கிரவண்டி,முண்டியம்பாக்கம், வளவனூர், கோலியனூர், பிடாகம், காணை, திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் பகுதியில் மழை பெய்துள்ளதா என்பதை கமென்டில் குறிப்பிடவும்.
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய விழுப்புரம் ஆட்சியர் பழனி, கடந்தாண்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு தீதருவித் தொகையாக 2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 ரூபாய் வழங்கப்பட்டது. நிகழாண்டில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2.10 கோடி தீதருவி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, விழுப்புரத்தில் உள்ள 6,16,087 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
கஞ்சனூர், அரசூர் மற்றும் பூத்தமேடு துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 4) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சேமங்கலம், ஓரத்தூர், கொசப்பாளையம், பூண்டி, வேம்பி, தும்பூர், தாங்கல், கஸ்காரணை, அசோகபுரி, லட்சுமிபுரம், குண்டலபுலியூர், பம்பாதிரிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி அருகே அனந்தபுரத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் அனந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே போல் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் இன்று கிணற்றில் குளிக்க இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.