India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செண்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 22) பராமரிப்பு பணிகள் ஒளவையார்குப்பம் , கூட்டேரிப்பட்டு, கீழ் எடையாளம், சின்ன நெற் குணம், முப்புளி , கொடிமா , செண்டூர், ஆலகிராமம், நாகந்துார் , மரூர், கொத்த மங்கலம், பேரணி, பாலப் பட்டு, நெடி மொழியனுார் , விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை பகுதியில் மின் வினியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள திருவாமாத்தூரில் 1,500 ஆண்டுகள் பழமையான சோழர்கள் காலத்து கோயில் அமைந்துள்ளது. இது அபிராமேஸ்வர் கோயில் என்றும், அம்மன் முத்தாம்பிகை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் 7 அடுக்கு கோபுரம் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயிலூர் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திற்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி கட்டிடத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் அழைப்பிலும், கட்டிடப் பணி முடிக்கப்பட்ட கல்வெட்டிலும் இடம்பெறவில்லை. இதனால் சில கவுன்சிலர்கள் அதிருப்தியில் நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
கிளியனூரில் கடந்தா 2017ஆம் நடந்த குற்றச் சம்பவத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜோசப் மணிகண்டன்(34) சிறையில் அடைக்கப்பட்டார். 3 கொலை வழக்கில் தொடர்புடைய இவர், ஜாமீனில் வெளியே வந்து விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து, வானூர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நேற்றிரவு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில் ஜோசப்பை சுற்றி வளைத்து கைது செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் பகுதியில் 6 செ.மீ மழைப்பொழிவும், கெடார், முகையூர் பகுதியில் தலா 4 செ.மீ மழைப்பொழிவும், திருவெண்ணெய்நல்லூரில் 3.5 செ.மீ மழைப்பொழிவும், சூரப்பட்டு, மணம்பூண்டி பகுதியில் தலா 2 செ.மீ மழை பொழிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் – புதுச்சேரி மெமு ரயில், ஆக.31ம் செப்.1 தேதிகளில் முண்டிப்பாக்கத்துடன் நிறுத்தப்படும். திண்டுக்கல் – விழுப்புரம் விரைவு ரயில், ஆக.31, செப்.2 ஆகிய தேதிகளில் விருதாச்சலத்துடன் நிறுத்தப்படும். திருப்பதி – புதுச்சேரி மெமு விரைவு ரயில், ஆக.31, செப்.2 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும். காட்பாடி – விழுப்புரம் மெமு ரயில், செப்.1ஆம் தேதி வெங்கடேஷபுரத்துடன் நிறுத்தப்படும்.
காக்கிநாடா – புதுச்சேரி விரைவு ரயில் செப். 1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப்.2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவுக்கு பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். காச்சிகூடா – புதுச்சேரி விரைவு ரயில் செப்.1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப்.2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காச்சிகூடாவுக்கு பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் 29ஆம் தேதி முதல் செப்.2ஆம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி – விழுப்புரம் இடையேயான மெமு ரயில், இரு வழித்தடங்களிலும் செப்.1ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருவாரூரில் இருந்து விழுப்புரத்துக்கு மாலை 3.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் செப்.1ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடையப்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஆட்சியர் பழனி, “மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பாதுகாப்பு மையங்கள், உபகரணங்கள் தயாராக உள்ளது. எனவே, அனைத்துத்துறையினரும் களப்பணிகளை மேற்கொள்ள தயாராக வேண்டும். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.